யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கு பேராசிரியர்கள் இருவரின் பெயர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கு பேராசிரியர்கள் இருவரின் பெயர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பல்கலைக்கழகப் பேரவை இன்று பரிந்துரைத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணித புள்ளிவிவரவியல் துறையின் மூத்த பேராசிரியருமான சி.சிறீசற்குணராசா மற்றும் விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியுமான கே.மிகுந்தன் ஆகிய இருவரின் பெயர்களையுமே பேரவை பரிந்துரைத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் 1976ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கு இணங்க பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிக்க தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒவ்வொரு துணைவேந்தர் தெரிவின் போதும் அதில் போட்டியிடுவோர் தாம் துணைவேந்தராகத் தெரிவானதும் பிரதித் துணைவேந்தர் ஒருவரை முன்மொழிந்து பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுப்போம் என்று பேரவை முன் உரையாற்றுவர்.
எனினும் எந்தவொரு துணைவேந்தரும் பதவிக்கு வந்த பின்னர் பிரதித் துணைவேந்தரை நியமிப்பதற்கான அனுமதியை பேரவையிடம் கோருவதில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, தகுதிவாய்ந்த அதிகாரியாக உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைகளை சீர்செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிக்கவுள்ளார்.
பிரதித் துணைவேந்தர் பதவிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ளக விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கு பேராசிரியர் சி.சிறீசற்குணராசா, பேராசிரியர் கே.மிகுந்தன் ஆகிய இருவரும் மட்டுமே விண்ணப்பத்திருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக அவர்கள் இருவரின் பெயர்களும் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் இருவரில் ஒருவரை நியமிப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை தனது பரிந்துரையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியது.
இதேவேளை, அடுத்த துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் சி.சிறீசற்குணராசா, பேராசிரியர் கே.மிகுந்தன் ஆகிய இருவரும் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணித புள்ளிவிவரவியல் துறையின் மூத்த பேராசிரியருமான சி.சிறீசற்குணராசா மற்றும் விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியுமான கே.மிகுந்தன் ஆகிய இருவரின் பெயர்களையுமே பேரவை பரிந்துரைத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஸ்திரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கும் 1976ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கு இணங்க பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிக்க தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தீர்மானித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒவ்வொரு துணைவேந்தர் தெரிவின் போதும் அதில் போட்டியிடுவோர் தாம் துணைவேந்தராகத் தெரிவானதும் பிரதித் துணைவேந்தர் ஒருவரை முன்மொழிந்து பல்கலைக்கழக நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுப்போம் என்று பேரவை முன் உரையாற்றுவர்.
எனினும் எந்தவொரு துணைவேந்தரும் பதவிக்கு வந்த பின்னர் பிரதித் துணைவேந்தரை நியமிப்பதற்கான அனுமதியை பேரவையிடம் கோருவதில்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் க.கந்தசாமி, தகுதிவாய்ந்த அதிகாரியாக உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மைகளை சீர்செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் நிர்வாகத்தை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் பிரதித் துணைவேந்தர் ஒருவரை நியமிக்கவுள்ளார்.
பிரதித் துணைவேந்தர் பதவிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ளக விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கு பேராசிரியர் சி.சிறீசற்குணராசா, பேராசிரியர் கே.மிகுந்தன் ஆகிய இருவரும் மட்டுமே விண்ணப்பத்திருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் அனுமதிக்காக அவர்கள் இருவரின் பெயர்களும் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் இருவரில் ஒருவரை நியமிப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை தனது பரிந்துரையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியது.
இதேவேளை, அடுத்த துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் சி.சிறீசற்குணராசா, பேராசிரியர் கே.மிகுந்தன் ஆகிய இருவரும் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.