எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பாதையை நான் பின்பற்றி, மாகாண சபைகளுக்கு மிக உயர்ந்தளவில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையை முன்னேற...
எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பாதையை நான் பின்பற்றி, மாகாண சபைகளுக்கு மிக உயர்ந்தளவில் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையை முன்னேற்றுவேன். இனம், சாதி, மதம் ஆகியவற்றைப் புறக்கணிக்கும் ஒரு பிரிக்கப்படாத ஐக்கிய நாடாக இலங்கையை மக்கள் பலத்துடன் மாற்றுவேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் “செமாட்ட செவானா” வீட்டு திட்டத்தின் கீழ் 267 வது மாதிரி கிராமமான அல்மினாவை நேற்று முன்தினம் சனிக்கிழமை (31) திறந்து வைத்த பின்னர் அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த நாட்டில் 13 ஆவது திருத்தத்திற்கு சக்தி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
தேர்தலின் போது, எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். பின்னர் அவர்கள் யாரும் மாகாண சபைகளை பற்றி சரியான கவனம் செலுத்துவதில்லை.

நமது அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் 13 பிளஸ் வழங்குவதாக பேசினர். அதே நேரத்தில் அவர்கள் இலங்கையில் 13 மைனஸ் பற்றி பேசினர். உண்மையில், அவர்கள் வெளிநாடுகளில் எதையோ பேசுகிறார்கள். ஆனால், நாட்டில் முற்றிலும் மாறுபட்ட ஏமாற்றும் கதைகளை கூறுகிறார்கள். இருப்பினும், நான் அதை செய்ய மாட்டேன். நான் உறுதியளித்ததை நிறைவேற்றுவேன். எனவே மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
நான் ஒருபோதும் நாட்டில் ஒரு பிரிவை அனுமதிக்க மாட்டேன். மத, இன அல்லது மொழிரீதியான பிளவுகளை உருவாக்கும் அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பேன். மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் இருந்து மீட்டு, உறுதியான மனதுடன் நாட்டை ஒன்றிணைத்து இலங்கையை மகிழ்ச்சியான மற்றும் அழகானதாக மாற்றுவேன் என்றார்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலக பிரிவில் “செமாட்ட செவானா” வீட்டு திட்டத்தின் கீழ் 267 வது மாதிரி கிராமமான அல்மினாவை நேற்று முன்தினம் சனிக்கிழமை (31) திறந்து வைத்த பின்னர் அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த நாட்டில் 13 ஆவது திருத்தத்திற்கு சக்தி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
தேர்தலின் போது, எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். பின்னர் அவர்கள் யாரும் மாகாண சபைகளை பற்றி சரியான கவனம் செலுத்துவதில்லை.

நமது அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் 13 பிளஸ் வழங்குவதாக பேசினர். அதே நேரத்தில் அவர்கள் இலங்கையில் 13 மைனஸ் பற்றி பேசினர். உண்மையில், அவர்கள் வெளிநாடுகளில் எதையோ பேசுகிறார்கள். ஆனால், நாட்டில் முற்றிலும் மாறுபட்ட ஏமாற்றும் கதைகளை கூறுகிறார்கள். இருப்பினும், நான் அதை செய்ய மாட்டேன். நான் உறுதியளித்ததை நிறைவேற்றுவேன். எனவே மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
நான் ஒருபோதும் நாட்டில் ஒரு பிரிவை அனுமதிக்க மாட்டேன். மத, இன அல்லது மொழிரீதியான பிளவுகளை உருவாக்கும் அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பேன். மக்களை பிளவுபடுத்தும் அரசியலில் இருந்து மீட்டு, உறுதியான மனதுடன் நாட்டை ஒன்றிணைத்து இலங்கையை மகிழ்ச்சியான மற்றும் அழகானதாக மாற்றுவேன் என்றார்.