முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓர் பண்ணை அமைத்து அதில் ஆடு வளர்ப்பு மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பண்ணையை அமைத...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓர் பண்ணை அமைத்து அதில் ஆடு வளர்ப்பு மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பண்ணையை அமைத்த அதிகாரிகள் கொள்வனவிற்கான நிதியை ஆண்டு நிறைவடைய முன்பே திருப்பியனுப்பியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராயா குற்றம் சாட்டினார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTUSEOXW4cLiAZbNzAkzRXIDfjBwfhvXut-Z5HTH1YQAKhxB8PmY6QBxM1YLzwWV81-QJHCvd7ZoJ4-FYr__SW9Ysdcoci2hqmxGIv7QTKdPVHhFLtH7pobikWyiHQUxpDtji2yyDcwxA/s640/tyt.jpg)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கனகரத்தினம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கும் ஓளிரும் வாழ்வும் மாற்றுவலுவுள்ளோர் இல்லத்தின் வளர்ச்சிக்காக கடந்த அரசினால் ஓர் பண்ணை அமைத்து அதில் ஆடு வளர்ப்பு மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபா நிதி அனுமதிக்கப்பட்டது. வந்த நிலையில் பண்ணையை அமைத்த அதிகாரிகள் கொள்வனவிற்கான நிதியை ஆண்டு நிறைவடைய முன்பே திருப்பியனுப்பியமை நிர்வாகத் திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறு 3ம் மாதம் வந்த நிதி அனுமதிக்கு 10ம. மாதம் வரை பணி செய்யாது தற்போது திரும்பியது என்றால் இதில் சந்மேகம் எழுவது நியாயமானது. என்றார். குறித்த விடயத்திற்கு மாவட்டச் செயலகம் சார்பில் பதிலளிக்கையில் ,
இத் திட்டத்மிற்காக ஆடு கொள்வனவிற்கு விளம்பரம் கோரப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்தமையினாலேயே கொள்வனவு இடம்பெறவில்லை . எனப் பதிலளிக்கப்பட்டது. -
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTUSEOXW4cLiAZbNzAkzRXIDfjBwfhvXut-Z5HTH1YQAKhxB8PmY6QBxM1YLzwWV81-QJHCvd7ZoJ4-FYr__SW9Ysdcoci2hqmxGIv7QTKdPVHhFLtH7pobikWyiHQUxpDtji2yyDcwxA/s640/tyt.jpg)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கனகரத்தினம் தலமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கும் ஓளிரும் வாழ்வும் மாற்றுவலுவுள்ளோர் இல்லத்தின் வளர்ச்சிக்காக கடந்த அரசினால் ஓர் பண்ணை அமைத்து அதில் ஆடு வளர்ப்பு மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபா நிதி அனுமதிக்கப்பட்டது. வந்த நிலையில் பண்ணையை அமைத்த அதிகாரிகள் கொள்வனவிற்கான நிதியை ஆண்டு நிறைவடைய முன்பே திருப்பியனுப்பியமை நிர்வாகத் திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறு 3ம் மாதம் வந்த நிதி அனுமதிக்கு 10ம. மாதம் வரை பணி செய்யாது தற்போது திரும்பியது என்றால் இதில் சந்மேகம் எழுவது நியாயமானது. என்றார். குறித்த விடயத்திற்கு மாவட்டச் செயலகம் சார்பில் பதிலளிக்கையில் ,
இத் திட்டத்மிற்காக ஆடு கொள்வனவிற்கு விளம்பரம் கோரப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்தமையினாலேயே கொள்வனவு இடம்பெறவில்லை . எனப் பதிலளிக்கப்பட்டது. -