இந்திய - சீன போரின் 55வது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 20) கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகையில் முதலிரண்டு இடங்களில் உள்ள சீனாவும் இந்த...
இந்திய - சீன போரின் 55வது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 20) கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள் தொகையில் முதலிரண்டு இடங்களில் உள்ள சீனாவும் இந்தியாவும் உலகின் முன்னணி நாடுகளாகவும் உள்ளன. ஆனால் இந்திய எல்லைப் பகுதிக்குள், சீனா அவ்வப்போது உள்ளே வருவதும், பிறகு பின்வாங்குவதும் தொடர்ந்து நடக்கிறது.
சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் டோக்லாம் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். போர் ஏற்படும் சூழல் உருவானது. பின் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து நிலைமை சீரானது.
கடந்த 1962ம் ஆண்டு அக்., 20ம் தேதி இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. ஒரு மாதம் வரை நீண்ட இப்போர் நவ., 21ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போரில் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது. போரில் 1383 இந்திய வீரர்கள் பலியாகினர். 3900 இந்திய வீரர்களை சீனா பிடித்துக் கொண்டது. சீன தரப்பில் 722 வீரர்கள் பலியாகினர். போரின் போது இந்திய பிரதமராக நேருவும், சீனாவின் கம்யூனிச கட்சி தலைவராக மா சேதுங்கும் ஆட்சியில் இருந்தனர்.
காரணம் என்ன
* இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அக்சய் சின் எல்லைப் பகுதிக்குக் குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதைத் தடுக்கும் வகையில் காவல் சாவடிகளை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.
* எல்லைப் பிரச்சினை தவிர, வேறு சில விஷயங்கள் இந்தப் போருக்கான காரணங்களாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
* திபெத்தில் 1959ல் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வெளியேறியதலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இது சீனாவை ஆத்திரப்படுத்தியது. இதுவும் சீனா போர் தொடுக்க காரணம் என கூறப்பட்டது.
எப்படி நடந்தது
'இந்தியா - சீனா பாய் பாய்' - 'இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள்' என்ற கருத்து இந்திய அரசால் அப்போது முன்வைக்கப்பட்டது. இதனால் சீனா போர் தொடுக்காது என்ற நம்பிக்கையில் இருந்தது.
இந்திய ராணுவமும் போருக்கு முழு அளவில் தயாராகாமலே இருந்தது. இந்நிலையில் 1962 அக்., 20ல் காஷ்மீரின் லடாக் பகுதியில் முதலில் தாக்குதலை சீனா தொடங்கியது. பின் அங்கிருந்து மக்மோகன் கோடு என அழைக்கப்படும் வடகிழக்கு வரையிலான எல்லைப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு இந்திய படையினரின் தொலைத்தொடர்பு சேவையை சீனா தகர்த்தது. சீன வீரர்கள் வேகமாக முன்னேறி இந்திய எல்லைப்பகுதிகளை கைப்பற்றினர். வீரர்களின் உயிர்பலியும் அதிகரித்தது. நிலைமையை உணர்ந்தநேரு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் உதவி கோரினார். இதற்கு அந்நாடுகள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என நினைத்த சீனா, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தயாரானது. நவ., 21ல் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் பாடம் கற்ற இந்தியா, பின், ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. தற்போது உலகின் 4வது பெரிய ராணுவமாக இந்தியா விளங்குகிறது.
14 ஆயிரம்
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இந்த போர் நடந்தது.
விமானப்படை இல்லை
இந்தப் போரில், இருநாடுகளின் தரைப்படைகள் மட்டுமே பங்கேற்றன. விமானப்படை, கப்பல்படை பங்கேற்கவில்லை.
8 : 2
சீனா சார்பில் 80 ஆயிரம் ராணுவ வீரர்களும், இந்தியா சார்பில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டனர்.
உயிர் தியாகம்
இந்தியத் தரப்பில் 1,383 வீரர்களும், சீனத் தரப்பில் 722 வீரர்களும் பலியாகினர்.
இழந்த பகுதி
காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான அக்சய் சின் பகுதியையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இன்றளவும் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
2
இந்தியா தனது எல்லைப்பகுதியை வங்கதேசத்துக்கு அடுத்து சீனாவுடன் தான் அதிகளவில் (3,488 கி.மீ.,) பகிர்ந்து கொண்டுள்ளது.
மக்கள் தொகையில் முதலிரண்டு இடங்களில் உள்ள சீனாவும் இந்தியாவும் உலகின் முன்னணி நாடுகளாகவும் உள்ளன. ஆனால் இந்திய எல்லைப் பகுதிக்குள், சீனா அவ்வப்போது உள்ளே வருவதும், பிறகு பின்வாங்குவதும் தொடர்ந்து நடக்கிறது.
சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் டோக்லாம் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். போர் ஏற்படும் சூழல் உருவானது. பின் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து நிலைமை சீரானது.
கடந்த 1962ம் ஆண்டு அக்., 20ம் தேதி இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. ஒரு மாதம் வரை நீண்ட இப்போர் நவ., 21ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போரில் இந்தியாவுக்கு தோல்வி ஏற்பட்டது. போரில் 1383 இந்திய வீரர்கள் பலியாகினர். 3900 இந்திய வீரர்களை சீனா பிடித்துக் கொண்டது. சீன தரப்பில் 722 வீரர்கள் பலியாகினர். போரின் போது இந்திய பிரதமராக நேருவும், சீனாவின் கம்யூனிச கட்சி தலைவராக மா சேதுங்கும் ஆட்சியில் இருந்தனர்.
காரணம் என்ன
* இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள அக்சய் சின் எல்லைப் பகுதிக்குக் குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதைத் தடுக்கும் வகையில் காவல் சாவடிகளை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.
* எல்லைப் பிரச்சினை தவிர, வேறு சில விஷயங்கள் இந்தப் போருக்கான காரணங்களாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
* திபெத்தில் 1959ல் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வெளியேறியதலாய் லாமா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இது சீனாவை ஆத்திரப்படுத்தியது. இதுவும் சீனா போர் தொடுக்க காரணம் என கூறப்பட்டது.
எப்படி நடந்தது
'இந்தியா - சீனா பாய் பாய்' - 'இந்தியாவும் சீனாவும் சகோதரர்கள்' என்ற கருத்து இந்திய அரசால் அப்போது முன்வைக்கப்பட்டது. இதனால் சீனா போர் தொடுக்காது என்ற நம்பிக்கையில் இருந்தது.
இந்திய ராணுவமும் போருக்கு முழு அளவில் தயாராகாமலே இருந்தது. இந்நிலையில் 1962 அக்., 20ல் காஷ்மீரின் லடாக் பகுதியில் முதலில் தாக்குதலை சீனா தொடங்கியது. பின் அங்கிருந்து மக்மோகன் கோடு என அழைக்கப்படும் வடகிழக்கு வரையிலான எல்லைப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு இந்திய படையினரின் தொலைத்தொடர்பு சேவையை சீனா தகர்த்தது. சீன வீரர்கள் வேகமாக முன்னேறி இந்திய எல்லைப்பகுதிகளை கைப்பற்றினர். வீரர்களின் உயிர்பலியும் அதிகரித்தது. நிலைமையை உணர்ந்தநேரு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் உதவி கோரினார். இதற்கு அந்நாடுகள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என நினைத்த சீனா, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தயாரானது. நவ., 21ல் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் பாடம் கற்ற இந்தியா, பின், ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. தற்போது உலகின் 4வது பெரிய ராணுவமாக இந்தியா விளங்குகிறது.
14 ஆயிரம்
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இந்த போர் நடந்தது.
விமானப்படை இல்லை
இந்தப் போரில், இருநாடுகளின் தரைப்படைகள் மட்டுமே பங்கேற்றன. விமானப்படை, கப்பல்படை பங்கேற்கவில்லை.
8 : 2
சீனா சார்பில் 80 ஆயிரம் ராணுவ வீரர்களும், இந்தியா சார்பில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டனர்.
உயிர் தியாகம்
இந்தியத் தரப்பில் 1,383 வீரர்களும், சீனத் தரப்பில் 722 வீரர்களும் பலியாகினர்.
இழந்த பகுதி
காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான அக்சய் சின் பகுதியையும் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இன்றளவும் அதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
2
இந்தியா தனது எல்லைப்பகுதியை வங்கதேசத்துக்கு அடுத்து சீனாவுடன் தான் அதிகளவில் (3,488 கி.மீ.,) பகிர்ந்து கொண்டுள்ளது.