தனது காதல் மனைவியைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்த கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்பளித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம். ...
தனது காதல் மனைவியைப் பொல்லால் தாக்கிக் கொலை செய்த கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்பளித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.
திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொலையல்ல என்றபோதும் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
2012 வைகாசி (மே) மாதம் 26ஆம் நாள் யோகலிங்கம் பிரேமினி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பிரேமினியின் காதல் கணவனான கந்தையா யோகலிங்கத்தை இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்தனர் கிளிநொச்சி காவலர்கள்.
கொலை நிகழ்ந்தபோது பிரேமினியும் யோகலிங்கமும் தனித்தனியே பிரிந்தே வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதியினருக்கு 5 பிள்ளைகள்.
கிளிநொச்சி நீதிவான் மன்றில் நடந்த சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தியது சட்டமா அதிபர் திணைக்களம்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2019 ஆனி 7ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்காகச் பிரேமினியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தால் கோபாவேசப்பட்டுத் தன்னிலையிழந்த யோகலிங்கம் பொல்லால் தாக்கியதில் இறப்பு சம்பவித்தது என்பது விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
யோகலிங்கம் பொல்லால் பிரேமினியைத் தாக்கியதைக் கண்ட அயலவரான சகாயநாதன் அன்னமேரி இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக இருந்தார்.‘‘யோகலிக்கம் அவரது மனைவியான பிரேமினியை கொலை செய்யும் குற்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
திடீரென ஏற்பட்ட தர்க்கத்தின்போது விளைந்த தன்னிலையிழப்பு, திடீர் கோபாவேசம் காரணமாகவே பிரேமினி தாக்கப்பட்டு உயிரிழந்தார்“ என்று நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்க அறிவித்தார்.
எனவே யோகலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் அவர் நிரபராதியானபோதும் கொலையாகாத மனித உயிர் போக்கல் குற்றத்தை அவர் இழைத்தார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்காகக் யோகலிங்கத்திற்கு 7 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
கைது செய்யப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்படாமல் குற்றவாளி சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொலையல்ல என்றபோதும் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
2012 வைகாசி (மே) மாதம் 26ஆம் நாள் யோகலிங்கம் பிரேமினி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பிரேமினியின் காதல் கணவனான கந்தையா யோகலிங்கத்தை இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்தனர் கிளிநொச்சி காவலர்கள்.
கொலை நிகழ்ந்தபோது பிரேமினியும் யோகலிங்கமும் தனித்தனியே பிரிந்தே வாழ்ந்து வந்தனர். இந்தத் தம்பதியினருக்கு 5 பிள்ளைகள்.
கிளிநொச்சி நீதிவான் மன்றில் நடந்த சுருக்கமுறையற்ற விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டுச் சுமத்தியது சட்டமா அதிபர் திணைக்களம்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2019 ஆனி 7ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்காகச் பிரேமினியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தால் கோபாவேசப்பட்டுத் தன்னிலையிழந்த யோகலிங்கம் பொல்லால் தாக்கியதில் இறப்பு சம்பவித்தது என்பது விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
யோகலிங்கம் பொல்லால் பிரேமினியைத் தாக்கியதைக் கண்ட அயலவரான சகாயநாதன் அன்னமேரி இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக இருந்தார்.‘‘யோகலிக்கம் அவரது மனைவியான பிரேமினியை கொலை செய்யும் குற்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
திடீரென ஏற்பட்ட தர்க்கத்தின்போது விளைந்த தன்னிலையிழப்பு, திடீர் கோபாவேசம் காரணமாகவே பிரேமினி தாக்கப்பட்டு உயிரிழந்தார்“ என்று நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்க அறிவித்தார்.
எனவே யோகலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் அவர் நிரபராதியானபோதும் கொலையாகாத மனித உயிர் போக்கல் குற்றத்தை அவர் இழைத்தார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்திற்காகக் யோகலிங்கத்திற்கு 7 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
கைது செய்யப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்படாமல் குற்றவாளி சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.