யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பா...
யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படப் போகும் பாதிப்பைத் தடுப்போம் என வலியுறுத்தி நாளை போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பின்பு தென்மராட்சி, தீவகம் – மண்கும்பான் பகுதிகளிலும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் வளம் மிகவும் சுதந்திரமான முறையில் சூறையாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி பின்பு தென்மராட்சி, தீவகம் – மண்கும்பான் பகுதிகளிலும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.