பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் கலாச்சாரத்தை ஏனையவர்கள் ஏற்றுக்கொள்வதன் மூலமே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். தமிழ் பிரிவனைவாதத்தை ...
பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் கலாச்சாரத்தை ஏனையவர்கள் ஏற்றுக்கொள்வதன் மூலமே இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். தமிழ் பிரிவனைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும். தமிழ் மக்களை வைத்து ஏதாவது புரட்சி ஏற்படுத்த முயன்றால், பிரபாகரனிற்கு நந்திக்கடலில் ஏற்பட்ட நிலைமைதான் சுமந்திரனுக்கும் ஏற்படுமென தெரிவித்துள்ளார் சிஹல ராவய அமைப்பின் மாகல்கந்தே சுதந்த தேரர்.
தேசிய கீதம் தமிழில் பாடப்படக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக்கூடாதென்ற கருத்து தென்னிலங்கையில் வலுத்து வருகிறது. எனினும், தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் தெரிவித்த பாரதூரமான கருத்தை பிக்குகள் என்றரீதியில் கண்டிக்கிறோம். சுமந்திரன் யாழ்ப்பாணம் போகும்போது வேட்டியுடன் செல்கிறார். ஆனால் கொழும்பு வரும்போது வெள்ளைக்காரர்களை போல கோட் சூட் உடன் வருகிறார். அவர் வேட்டியுடன் யாழ்ப்பாணம் சென்றாலும், அவர் இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்பதை சம்பந்தன், சிறிதரன் ஆகியோர் மறந்து விட்டனர் என்பது கவலைக்குரிய விடயம்.
வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான இந்து மக்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் கோட் பாதராக சுமந்திரன் தான் இருப்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் பிரிவினைவாதத்தை போஷிக்கும், தமிழ் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும், சமஷ்டி கேட்கும், வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென அறிக்கை வெளியிடும் இந்த பிரிவினைவாதத்தை நோக்காக கொண்டு செயற்படும் நபரே சுமந்திரன் என்பதையும் குறிப்பிட்டு கூற வேண்டும்.
நல்லிணக்கம் என்ற சிந்தனையின் கீழ், இந்த நாட்டில் இருந்து கொண்டு தேசிய கீதத்தையும் இரண்டு மொழிகளில் பாடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில்த்தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய கீதம் தமிழ் மொழியிலா, சிங்கள மொழியிலா இசைக்கப்படுகிறது என்பதல்ல பிரச்சனை. தேசிய கீதத்தை எவ்வாறு பேசினாலும் பிரச்சனையாக்க தேவையில்லை.
இனங்களிற்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதும், இனங்களிற்கிடையிலான நல்லிணக்கத்தை அதிகரிப்பதுமே உண்மையான நல்லிணக்கமாக இருக்கும். இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே செய்ய முடியும். பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் அவசரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ் பிரிவனைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அப்பாவி தமிழ் மக்களின் ஊடாக புரட்சியொன்றை செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், பிரபாகரன் நந்திக்கடலில் இறுதிமூச்சை விட்டதைப் போலவே சுமந்திரனிற்கும் தேவையெனில் எமது இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
புரட்சியொன்றை ஆரம்பித்தால், நந்திக்கடல் பகுதியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைபோல, அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க தயார் என்பதை தெரிவிக்கிறோம் என்றார்.
தேசிய கீதம் தமிழில் பாடப்படக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக்கூடாதென்ற கருத்து தென்னிலங்கையில் வலுத்து வருகிறது. எனினும், தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் தெரிவித்த பாரதூரமான கருத்தை பிக்குகள் என்றரீதியில் கண்டிக்கிறோம். சுமந்திரன் யாழ்ப்பாணம் போகும்போது வேட்டியுடன் செல்கிறார். ஆனால் கொழும்பு வரும்போது வெள்ளைக்காரர்களை போல கோட் சூட் உடன் வருகிறார். அவர் வேட்டியுடன் யாழ்ப்பாணம் சென்றாலும், அவர் இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்பதை சம்பந்தன், சிறிதரன் ஆகியோர் மறந்து விட்டனர் என்பது கவலைக்குரிய விடயம்.
வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான இந்து மக்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் கோட் பாதராக சுமந்திரன் தான் இருப்பதையும் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் பிரிவினைவாதத்தை போஷிக்கும், தமிழ் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும், சமஷ்டி கேட்கும், வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென அறிக்கை வெளியிடும் இந்த பிரிவினைவாதத்தை நோக்காக கொண்டு செயற்படும் நபரே சுமந்திரன் என்பதையும் குறிப்பிட்டு கூற வேண்டும்.
நல்லிணக்கம் என்ற சிந்தனையின் கீழ், இந்த நாட்டில் இருந்து கொண்டு தேசிய கீதத்தையும் இரண்டு மொழிகளில் பாடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில்த்தான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய கீதம் தமிழ் மொழியிலா, சிங்கள மொழியிலா இசைக்கப்படுகிறது என்பதல்ல பிரச்சனை. தேசிய கீதத்தை எவ்வாறு பேசினாலும் பிரச்சனையாக்க தேவையில்லை.
இனங்களிற்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதும், இனங்களிற்கிடையிலான நல்லிணக்கத்தை அதிகரிப்பதுமே உண்மையான நல்லிணக்கமாக இருக்கும். இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே செய்ய முடியும். பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் அவசரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். தமிழ் பிரிவனைவாதத்தை வளர்க்கும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு உடனடியாக புனர்வாழ்வளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அப்பாவி தமிழ் மக்களின் ஊடாக புரட்சியொன்றை செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், பிரபாகரன் நந்திக்கடலில் இறுதிமூச்சை விட்டதைப் போலவே சுமந்திரனிற்கும் தேவையெனில் எமது இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
புரட்சியொன்றை ஆரம்பித்தால், நந்திக்கடல் பகுதியில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைபோல, அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க தயார் என்பதை தெரிவிக்கிறோம் என்றார்.