ந.லோகதயாளன். நாட்டில் நிலவும்சிறிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தினால் விதை வெங்காயங்கள் உணவுப் பாவனைக்கா சந்தைக்கு விடுவதனால் அடுத்த ஆண்டு ...
ந.லோகதயாளன்.
நாட்டில் நிலவும்சிறிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தினால் விதை வெங்காயங்கள் உணவுப் பாவனைக்கா சந்தைக்கு விடுவதனால் அடுத்த ஆண்டு விதை வெங்காயத்தின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கவே செய்யும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயம் அது தற்போது பெரிய விலையான வெங்காயமாக 500 ரூபாவினைத் தாண்டியமை தொடரபில் மக்கள் பெரும் ஆச்சரியம் வெளியிடுகின்றதோடு அதனை நம்பி தொழில் புரிந்த பலரும் தொழில் வாய்ப்பினையும் இழந்து தவிக்கின்றனர்.
இதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த காலத்தில் டிசம்பர் மாதங்களில் 100 ரூபா முதல் 150ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சிறிய வெங்காயம் இம்முறை தற்போது 400 ரூபாவினவயும் தாண்டி 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் காரணமாக பாவனையாளர்கள் பாதிக்கப்படுவதோடு பெரும் கவலையும் வெளியிடுகின்றனமை தொடர்பில் திருநெல்வேலிச் சந்தையில் கடந்த 30 ஆண்டுகளாக வெங்காய விற்பனையில் ஈடுபடும் இந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது திருநெல்வேலிச் சந்தையில் வெங்காய விற்பனையில் மட்டும் குறைந்த்து 20 வர்த்தகர்கள் ஈடுபடுவது வழமை தற்போது ஐந்துபேரே கடந்த சில நாட்களாக விற்பனையில் ஈடுபடும் அதேநேரம் முன்னர் நாள் ஒன்றிற்கு ஒருவர் 300 கிலோ விற்பனை செய்தால் தற்போது 100 கிலோ விற்பதும் கடினமாகவே உள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாண வெங்காயம் அழிவடைந்த காரணத்தினால் சிறிய வெங்காயம் தம்புல்லையில் 600ரூபாவும் கொரழும்பில் 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதனால் அங்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனால் போதிய வெங்காயத்தினை பெற முடியவில்லை.
என்றார்.
இவ்வாறு யாழ். மாவட்டத்தில் சின்ன வெங்காயம் என்றுமில்லாத அளவு விலை உச்சமடைந்தமை தொடர்பில்
யாழ்மாவட்ட விவசாய சம்மேளத்தின் தலைவர் தியாகலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ,
டிசம்பர் மாதகாலத்தில் சந்தைக்கு வரும் அதிக வெங்காயம் ஆடியில் பயிரிடப்படுபவைகளாகும். அதன் பிரகாரம் 2019ஆம் ஆண்டு சிறுபோக வெங்காயச் செய்கை திடீர் மழையின் காரணமாக அழிவடைந்தமையினால் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்பு தற்போது மேட்டு நிலத்தில் பயிரிடப்பட்டவையும் தற்போதைய மழையினால் அழிவைச் சந்தித்தது.
இதன் காரணமாக சின்ன வெங்காயத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கையிருப்பில் இருக்கும் சிறிய வெங்காயம் மீள் நடுகைக்கு செல்லும் அதேநேரம் விதை வெங்காயமே பயன்பாட்டிற்காகவும் சந்தைக்கு வருகின்றது. விதை வெங்காயமானது ஒரு அந்தர் வெங்காயம் 20 ஆயிரம் ரூபா விற்கும் நிலையில் அதுவே உணவுப் பயன் பயன்பாட்டிற்கும் வருகின்றது.
அவ்வாறு ஒரு அந்தர் 20 ஆயிரம் ரூபா எனில் ஒரு கிலோ 400 ரூபாவினை எட்டும் நிலமையே கானப்படுகின்றது. இதேநேரம் வடக்கில் சின்ன வெங்காயச் செய்கையே ஆயிரக் கணக்கான ஏக்கரில் செய்யும்போதும் ஏற்படும் அழிவுகளிற்கு எந்தவிதமான இலவச காப்புறுதியும் கிடையாது. அதேநேரம் தெற்கில் சின்ன வெங்காயம் செய்கை இடம்பெறுவது கிடையாது. ஆனால் பெரிய வெங்காயச் செய்கை இடம்பெறுகின்றது. இலங்கையில் பெரிய வெங்காயம் அழிவடைந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படும். பெரிய வெங்காயம் தெற்கில்தான் பயிரப்படுகின்றது. சிறிய வெங்காயத்திற்கு ஆயிரம் கண்டிற்கு ஆயிரத்து 200 ரூபா காப்புறுதி செலுத்த வேண்டும். அதாவது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாவை தாண்டும்.
இதேநேரம் ஒரு மீனவன் கடலில் இறக்க நேரிட்டால் அரசு 10 லட்சம் ரூபா வழங்கும் அதேநேரம் இன்றுவரை விவசாயியை திரும்பியும் பார்ப்பது கிடையாது. அதற்குப் பதிலாக அணர்த்த முகாமைத்துவ இழப்பீடு மட்டும் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும். இதற்கு உதாரணர் கடந்த ஆண்டு புன்னாலைக்கட்டுவனில் இடி மின்னல் தாக்கம்காரணமாக மூன்று விவசாயிகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். அவர்களிற்கு மாவட்டச் செயலாளர் ஒரு உதவி வழங்கினார். அதனைவிட எவருமே திரும்பி பார்க்கவில்லை. என்றார்.
இம்முறை அதிக அழிவு தொடர்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
மாவட்டத்தில் இம்முறை சின்ன வெங்காயம் அழிவு ஏற்பட்டமை தொடர்பில் முறையிடப்பட்டு விபரங்கள் தற்போது திரட்டப்படுகின்றன. இதன் பிரகாரம் 400 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரையான அழிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. என்றார்.