ஓசோன் படலம் சிதைவடைவதால் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்து சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தைத் தடுத்து, கூடுதலான வெப்பத்த...
ஓசோன் படலம் சிதைவடைவதால் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்து
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தைத் தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது பூமியின் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் வாயு நிலையில் காணப்படுகின்றது.

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில், ஓசோன் படையை அழிக்கும் இரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அதனை அடுத்து, 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமியிலிருந்து 15 கி.மீ உயரம் முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதியில்தான் ஓசோன் படலம் பரவிக் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு இரசாயனத் தாக்குதல் புரிவதால் ஒக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஒக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.
இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை. புறஊதாக் கதிர்கள் பூமியில் மனிதருக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். இத்தகைய கதிர்களை பூமிக்கு வர விடாமல் தடுப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி.
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிதான் இப்பாதிப்புக்குக் காரணம். குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியாகும் குளோரோ புளோரோ கார்பன் ஓசோனுடன் தாக்குதல் புரிந்து குளோரினாகவும், ஒக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து போகிறது. உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தைல் புரோமைட், ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஒக்சைட் போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதில் குளோரின் பிரிந்து ஓசோன் துகளை தாக்குகிறது. இதனால்தான் இந்த குளோரோ புளோரோ கார்பன் பயன்படுத்த உலகில் தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளியேறும் குளோரோ புளோரோ கார்பன், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஒக்சைட், நைட்ரஸ் ஒக்சைட் போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
ஓசோன் வாயு அளவு குறைந்ததால் பூமியில் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். இதன் காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டாலு கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.
புவிக்கு பயன் தருகின்ற ஓசோன் படலம் உண்டென்பதை 1840இல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின் முதன் முதலில் கண்டறிந்தார்.
ஓசோனின் அளவையும் பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். இதன் அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் முதன்முதலில் கண்டறிந்தனர். இதையடுத்தே ஓசோனைக் காக்க 1987, செப்.16 இல் ெமான்ட்ரியல் ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஓசோன் அளவு குறைந்தால் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.புற ஊதாக் கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். இவை அழிவதால் மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.எனவே உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்வது அவசியம்.
ஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தைத் தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது பூமியின் வளிமண்டலத்தின் மேல் பகுதியில் வாயு நிலையில் காணப்படுகின்றது.

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி கனடா நாட்டின் தலைநகரில், ஓசோன் படையை அழிக்கும் இரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அதனை அடுத்து, 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமியிலிருந்து 15 கி.மீ உயரம் முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதியில்தான் ஓசோன் படலம் பரவிக் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு இரசாயனத் தாக்குதல் புரிவதால் ஒக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஒக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது.
இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை. புறஊதாக் கதிர்கள் பூமியில் மனிதருக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். இத்தகைய கதிர்களை பூமிக்கு வர விடாமல் தடுப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி.
ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிதான் இப்பாதிப்புக்குக் காரணம். குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியாகும் குளோரோ புளோரோ கார்பன் ஓசோனுடன் தாக்குதல் புரிந்து குளோரினாகவும், ஒக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து போகிறது. உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தைல் புரோமைட், ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஒக்சைட் போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதில் குளோரின் பிரிந்து ஓசோன் துகளை தாக்குகிறது. இதனால்தான் இந்த குளோரோ புளோரோ கார்பன் பயன்படுத்த உலகில் தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களிலிருந்து வெளியேறும் குளோரோ புளோரோ கார்பன், வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஒக்சைட், நைட்ரஸ் ஒக்சைட் போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
ஓசோன் வாயு அளவு குறைந்ததால் பூமியில் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். இதன் காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டாலு கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை.
புவிக்கு பயன் தருகின்ற ஓசோன் படலம் உண்டென்பதை 1840இல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின் முதன் முதலில் கண்டறிந்தார்.
ஓசோனின் அளவையும் பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். இதன் அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் முதன்முதலில் கண்டறிந்தனர். இதையடுத்தே ஓசோனைக் காக்க 1987, செப்.16 இல் ெமான்ட்ரியல் ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஓசோன் அளவு குறைந்தால் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.புற ஊதாக் கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். இவை அழிவதால் மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.எனவே உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்வது அவசியம்.
ஓசோன் அடர்த்தியை அளவிட உலகெங்கிலும் சுமார் 450 நிலையங்கள் இயங்கி வருகின்றன.