மாற்று அணியின் பிரவேசம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிச்சயம் பாதிப்புத்தான். கடந்தகாலங்களைப்போல் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறு...
மாற்று அணியின் பிரவேசம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிச்சயம் பாதிப்புத்தான். கடந்தகாலங்களைப்போல் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெறுவது கேள்விக்குறியாக இருந்தாலும், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு கூட்டம் (22) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். சில வேளைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடும். அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.
மாற்று அணி ஒன்று உருவாகும் போது, அது தமிழ் தேசியக்கூட்டமைப்பை பாதிக்கவே செய்யும். போட்டிகள் அதிகரிக்கின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாகவும் நாம் ஆராய்கிறோம். கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எம்முடன் இணைக்க வேண்டும் என்ற அப்பிராயமும் கூட்டமைப்பிற்குள் உள்ளது.
ஆலோசனை மட்டத்தில்தான் இந்த விடயங்கள் உள்ளது. அது எவ்வளவு சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் பிளவு இப்பொழுது அதிகரித்துள்ளது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாதாரண விடயமல்ல. அப்படி நடந்தால் மகிழ்ச்சி. சாத்தியமில்லாவிட்டால் இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதனால், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான வாக்குவீதமே அதிகமாக இருக்கும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும். கடந்த காலங்களைப்போல் 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட, அந்த இலக்கை அடைவதற்காக தீவிர முயற்சிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும்.
தேர்தலிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. அப்பொழுது கள நிலவரம் எப்படி மாற்றமடையுமென்பதை கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு கூட்டம் (22) வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். சில வேளைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடும். அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.
மாற்று அணி ஒன்று உருவாகும் போது, அது தமிழ் தேசியக்கூட்டமைப்பை பாதிக்கவே செய்யும். போட்டிகள் அதிகரிக்கின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாகவும் நாம் ஆராய்கிறோம். கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளை எம்முடன் இணைக்க வேண்டும் என்ற அப்பிராயமும் கூட்டமைப்பிற்குள் உள்ளது.
ஆலோசனை மட்டத்தில்தான் இந்த விடயங்கள் உள்ளது. அது எவ்வளவு சாத்தியமென்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் பிளவு இப்பொழுது அதிகரித்துள்ளது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாதாரண விடயமல்ல. அப்படி நடந்தால் மகிழ்ச்சி. சாத்தியமில்லாவிட்டால் இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதனால், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான வாக்குவீதமே அதிகமாக இருக்கும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும். கடந்த காலங்களைப்போல் 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட, அந்த இலக்கை அடைவதற்காக தீவிர முயற்சிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும்.
தேர்தலிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. அப்பொழுது கள நிலவரம் எப்படி மாற்றமடையுமென்பதை கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.