யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இறால் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் கடல் சுழியில் சிக்கி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இறால் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் கடல் சுழியில் சிக்கி இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் காக்கைதீவை சேர்ந்த வடிவேல் வரதன்(வயது 32 )என்பவரே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் காகைதீவு பகுதியில் இருந்து ஆறு பேருடன் படகு ஒன்றில் குருநகர் பகுதியில் இறால் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
குருநகர் கடற்பகுதியில் இறால் பிடிப்பதற்காக கடலில் கூடு கட்டிக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சுழியில் சிக்கி குறித்த குடும்பச்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் காகைதீவு பகுதியில் இருந்து ஆறு பேருடன் படகு ஒன்றில் குருநகர் பகுதியில் இறால் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.
குருநகர் கடற்பகுதியில் இறால் பிடிப்பதற்காக கடலில் கூடு கட்டிக்கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக சுழியில் சிக்கி குறித்த குடும்பச்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.