முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்ன...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவரை அன்று மாலை தொடக்கம் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுக்காவலில் மருத்துவர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஏற்ற மன்று நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க மன்று உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக இரண்டு பேர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
அந்த விவகாரத்திலேயே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவரை அன்று மாலை தொடக்கம் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுக்காவலில் மருத்துவர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஏற்ற மன்று நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க மன்று உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 10ஆஆம் திகதி, ராஜித சேனாரத்ன ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பாக இரண்டு பேர் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
அந்த விவகாரத்திலேயே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.