வவுனியா உளுக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குளத்திற்கு மீன்...
வவுனியா உளுக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 57 வயதுடைய ஜி.விஜயசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மீன் பிடிப்பதற்கு சென்ற விஜயசிறி நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் ஊர்மக்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது உளுக்குளம் குளத்தினுள் மிதந்த நிலையில் சடலம் காணப்பட்டதையடுத்து, பொலிஸாரால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 57 வயதுடைய ஜி.விஜயசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மீன் பிடிப்பதற்கு சென்ற விஜயசிறி நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் ஊர்மக்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது உளுக்குளம் குளத்தினுள் மிதந்த நிலையில் சடலம் காணப்பட்டதையடுத்து, பொலிஸாரால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.