யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமாக அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், சிறைச்சாலையின் ஆண்டிறுதி ஒன்று கூடல...
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக புத்தர் சிலை ஒன்று அவசர அவசரமாக அமைக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், சிறைச்சாலையின் ஆண்டிறுதி ஒன்று கூடலுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாளை வருகை தரவுள்ளதால் இந்தப் புத்தர் சிலை அவரால் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது.
அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்த புத்தர் சிலை தற்போது சிறைச்சாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புத்தர் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ள இருந்த இந்தச் சிலை இன்று இரவு 10 மணியளவில் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது.
முன்னதாக சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் முன்பக்க சுவரில் வரையப்பட்டது. அந்த இடத்திலேயே இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முப்படையினரின் முகாங்களில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறைச்சாலையிலும் புத்தர் சிலை வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் பழைமை வாய்ந்த நாகவிகாரை அண்மையில் உள்ள நிலையில் சிறைச்சாலையில் தனியாக புத்தர் சிலை வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தச் சிலை சங்கமித்தையினுடையது என்றும் ஒரு தரப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சிறைச்சாலையின் ஆண்டிறுதி ஒன்று கூடலுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாளை வருகை தரவுள்ளதால் இந்தப் புத்தர் சிலை அவரால் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது.
அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்த புத்தர் சிலை தற்போது சிறைச்சாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புத்தர் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ள இருந்த இந்தச் சிலை இன்று இரவு 10 மணியளவில் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது.
முன்னதாக சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் முன்பக்க சுவரில் வரையப்பட்டது. அந்த இடத்திலேயே இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முப்படையினரின் முகாங்களில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறைச்சாலையிலும் புத்தர் சிலை வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் பழைமை வாய்ந்த நாகவிகாரை அண்மையில் உள்ள நிலையில் சிறைச்சாலையில் தனியாக புத்தர் சிலை வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தச் சிலை சங்கமித்தையினுடையது என்றும் ஒரு தரப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.