பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்தி...
பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகப்போகும் திகதியை மாற்றிக்கொள்வதாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அத்திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இருப்பினும், அவர் நாளை மருத்துவ நடவடிக்கைக்கு செல்லவுள்ளமையினால் ஆஜராக முடியாது என்பதனால் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆஜராவதாக அறிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மே மாதம் நடத்தப்பட்ட “இனப்படுகொலை நினைவு” நிகழ்வு குறித்து சாட்சியம் வழங்குவதற்காக அவரை நாளை (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இருப்பினும், அவர் நாளை மருத்துவ நடவடிக்கைக்கு செல்லவுள்ளமையினால் ஆஜராக முடியாது என்பதனால் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆஜராவதாக அறிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.