விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசிய கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்து...
விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசிய கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா, செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் (19) யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பை இதனை தெரிவித்தனர்.
யாருடையதோ நோக்கத்தை நிறைவேற்றவே சம்பந்தன் இவ்வாறு பேசி வருகிறார் என்றும், என்.சிறிகாந்தா குற்றம் சுமத்தினர்.
அவர் உரையாற்றியபோது,
70வது ஆண்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சி கொண்டாட்டத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து பாரதூரமானது. அவரது கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அவரிடமிருந்து இத்தகையை ஒரு கருத்து, இத்தகைய நிகழ்வில் வெளியானது வேதனையளிக்கிறது.
யாருடையதோ நோக்கத்தை நிறைவேற்றவே சம்பந்தன் இவ்வாறு பேசி வருகிறார் என்றும், என்.சிறிகாந்தா குற்றம் சுமத்தினர்.
அவர் உரையாற்றியபோது,
70வது ஆண்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சி கொண்டாட்டத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து பாரதூரமானது. அவரது கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அவரிடமிருந்து இத்தகையை ஒரு கருத்து, இத்தகைய நிகழ்வில் வெளியானது வேதனையளிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென அவர் குறிப்பிட்டு, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இலங்கை அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழி பற்றி பிரஸ்தாபித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்ப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென கூறுவது, அவரைப் பொறுத்தவரை, நல்ல விடயமாக அவர் கருதுகிறார் என்பத்தான். எது நல்ல விடயம்? விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது என்ன நடந்தது? அந்த நிகழ்வின் காரணமாக, தமிழினம் எவ்வளவு இழப்பை சந்தித்தது? தோற்கடிக்கப்பட்டதால் இன்றுவரை அதனுடைய தாக்கம் என்னவென்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்றபோது, அந்த தோல்விக்கு பின்னால் சோக வரலாறு உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பலர் அங்கங்களை இழந்தனர். பலர் சரணடைந்தனர். எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இன்றும் சரணடைந்து காணாமல் போனவர்களை, உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நின்றார்களோ, அந்த இயக்கத்தை பற்றி சம்பந்தன் பேசியிருக்கிறார். யாரைத் திருப்திப்படுத்த சம்பந்தன் இதை கூறியுள்ளார்?
விடுதலைப்புலிகள் இயக்கம், அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோது, இலங்கையை இரண்டு நாடாக்குவதற்கான பேச்சுவார்த்தையென யாரும் சொல்ல மாட்டார்கள். இலங்கைத்தீவிற்குள், தமிழினத்திற்கான தீர்வை கண்டடைய முடியுமா என்பதற்கான பேச்சுவார்த்தை அது. தனியான தமிழீழத்தை அமைப்பதற்கான நோக்கத்தை கொண்டதல்ல அந்த பேச்சுவார்த்தையென்பதல்ல.
அது பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் தமிழ்மக்களின் ஆதரவை பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் மீண்டும் யுத்தம் வெடித்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதுதான் அரசின் யுத்த இலக்கு. இதற்கு வெளிநாட்டு ஆதரவுகள் பெறப்பட்டிருந்தது. இறுதியில் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அந்த தோல்வி,
தென்னிலங்கையை பொறுத்தவரை குதூகலத்துடன் கொண்டாடப்பட்டதை நாமறிவோம். அது புரிந்து கொள்ளப்படக் கூடியது. ஆனால் சுயமரியாதை கொண்ட தமிழினத்தை பொறுத்தவரை அந்த தோல்வி அதிர்ச்சியளிக்கக்கூடியது. வேதனை, விரக்தியளிப்பவையாக இருந்தது. அது யதார்த்தம்.
யுத்தத்தின் பின் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் தீர்வு என சொல்லப்பட்டதே தவிர, தமிழினத்தின் அரசியல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தீர்வை சிங்கள அரசுகள் வைக்கவில்லையென்பதை உலகம் அறியும்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தின் விளைவால், இந்த மண்ணில் இன்னும் துன்ப துயரத்தை அனுபவிக்கும் மக்களின் துயரம் நீண்டுகொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான், தமிழரசின் 70வது பிறந்தநாளை கொண்டாடியபோது, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து சம்பந்தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால், அவர் எங்கே நிற்கிறார்?
சுதந்திரம், சுயமரியாதையை கொண்ட மக்கள் இந்த கருத்தை ஏற்க மாட்டார்கள், விடுதலைப்புலிகளினால் 2004 தேர்தலிலும், பின்னர் புலிகளின் பெயரைச் சொல்லிச்சொல்லி 2010, 2015இலும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் இருப்பை நிலைநிறுத்தியது. இருந்தும், புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்ல விடயம் என சம்பந்தன் கூறுவது உண்மையில் அதிர்ச்ச்சியளிக்கிறது. இதற்கு எமது கண்டனங்களை தெரிவிக்கிறோம்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டது சம்பந்தனிற்கு எந்த அடிப்படையில் நல்லதென கேட்க விரும்புகிறோம்.
மஹிந்த ராஜபக்ச 2018 ஒக்ரோபர் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, சம்பந்தனை வந்து சந்திக்க விரும்பினார். நீங்கள் வர வேண்டாம், நான் வருகிறேன் என போனார்.
சில கோரிக்கைகளை வைத்தார். அடுத்த ஓரிரு நாளில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டபோது, ஜனநாயக விரோதமாக மஹிந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என நாங்கள் அனைவரும் கருதிக் கொண்டிருக்க, பிரதமர் மஹிந்தவை எப்படி நீங்கள் சென்று சந்திப்பீர்கள் என கேட்டேன்.
இதன்மூலம் அவரது நியமனத்தை அங்கீகரித்திருக்கிறீர்களா என கேட்டேன். அவரிடம் பதிலில்லை. அந்த கேள்வியின் தாக்கம் மறுநாளும் பிரதிபலித்தது.
சம்பந்தன் தான் நினைத்தபடி செயற்பட முடியாது, தான் நினைத்தபடி பேசக் கூடாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் எந்த இயக்கத்தின் ஊடாக தமிழினம் பறிகொடுத்துள்ளதோ, அந்த இயக்கத்தை சம்பந்தன் மலினப்படுத்தி பேச முடியாது,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தவறுகளை நாமறிவோம். ஒரே நோக்கத்துடன், தமிழீழ விடிவிற்காக நாங்கள் ஒன்றாக செயற்பட்டிருக்கிறோம். எங்களிற்குள் பகைமை ஏற்பட்டு, பலநூறு உயிர்களை பலி கொடுத்தோம். பல ஆண்டுகளின் பின், 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல தவறுகள் உள்ளன. அவர்களின் நடவடிக்கைகளால் மக்கள் சில துன்பங்களை அனுபவித்தார்கள். இந்த தவறுகளின் மத்தியிலும், புலிகளின் போராட்டத்திற்கான ஆதரவை முழு தமிழினமும் வழங்கியது. இது யதார்த்தம். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடந்த 10 வருடங்களின் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதில் எத்தகைய கஸ்டங்களை எதிர்கொள்கிறதென்பதை சம்பந்தன் அறிவார்.
வெறும் பேச்சுவார்த்தை மேசையில் இந்தியாவை காட்டி, சர்வதேசத்தை காட்டி, தமிழினத்தின் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டிய நிலையில்தான் கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலைமை முன்னர் இருந்ததில்லை. ஆகவே சம்பந்தன் வரலாற்றை மறந்துவிட்டு, உண்மைகளை மறந்து விட்டு, சம்பந்தன் இப்படி பேசியிருப்பது தமிழ் மக்களால் கண்டிக்கப்பட வேண்டும்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டது சம்பந்தனிற்கு எந்த அடிப்படையில் நல்லதென கேட்க விரும்புகிறோம்.
மஹிந்த ராஜபக்ச 2018 ஒக்ரோபர் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்டபோது, சம்பந்தனை வந்து சந்திக்க விரும்பினார். நீங்கள் வர வேண்டாம், நான் வருகிறேன் என போனார்.
சில கோரிக்கைகளை வைத்தார். அடுத்த ஓரிரு நாளில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவில் நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டபோது, ஜனநாயக விரோதமாக மஹிந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என நாங்கள் அனைவரும் கருதிக் கொண்டிருக்க, பிரதமர் மஹிந்தவை எப்படி நீங்கள் சென்று சந்திப்பீர்கள் என கேட்டேன். இதன்மூலம் அவரது நியமனத்தை அங்கீகரித்திருக்கிறீர்களா என கேட்டேன்.
அவரிடம் பதிலில்லை. அந்த கேள்வியின் தாக்கம் மறுநாளும் பிரதிபலித்தது.
சம்பந்தன் தான் நினைத்தபடி செயற்பட முடியாது. தான் நினைத்தபடி பேசக் கூடாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளையும் எந்த இயக்கத்தின் ஊடாக தமிழினம் பறிகொடுத்துள்ளதோ, அந்த இயக்கத்தை சம்பந்தன் மலினப்படுத்தி பேச முடியாது.