யாழ்.மாவட்ட செயலகத்தினால் சதொசாவிற்கு கிலோ 74 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட அரசி , வெளிக்கடைகளில் 105 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக...
யாழ்.மாவட்ட செயலகத்தினால் சதொசாவிற்கு கிலோ 74 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட அரசி , வெளிக்கடைகளில் 105 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை அவர் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொடுக்கப்பட்ட நெல் அரிசியாக்கப்பட்டு, மில்லில் இருந்து பொதி செய்யப்பட்டு சதொசாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த அரிசி தனியார் வணிக நிலையங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
இந்த அரிசி கிலோ 74 ரூபாவுக்கு யாழ். மாவட்ட செயலகத்தால் கொடுக்கப்பட்டு , சதொச ஐந்து ரூபாய் இலாபம் வைத்து 79 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்பதே நடைமுறை.
ஆனால் சதொசவிற்கு கொடுக்கப்பட்ட அரிசி தனியார் கடைகளில் 105 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
இதில் இரண்டு தவறுகள் நடைபெற்றுள்ளன. ஒன்று ஜனாதிபதி சொன்ன அரிசி விலைக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. இரண்டாவது சதொசாவிற்கு கொடுக்கப்பட்ட அரசி எவ்வாறு வெளிக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மிகபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக நம்புகின்றேன்.
அது தொடர்பில் சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வரி குறைப்பை செய்த பின்னர் பொருள்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருடன் இணைந்து வேலை திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். வரி குறைப்பின் ஊடாக பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டு மக்கள் நன்மையடைய வேண்டும் – என்றார்.
யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை அவர் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொடுக்கப்பட்ட நெல் அரிசியாக்கப்பட்டு, மில்லில் இருந்து பொதி செய்யப்பட்டு சதொசாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த அரிசி தனியார் வணிக நிலையங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.
இந்த அரிசி கிலோ 74 ரூபாவுக்கு யாழ். மாவட்ட செயலகத்தால் கொடுக்கப்பட்டு , சதொச ஐந்து ரூபாய் இலாபம் வைத்து 79 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்பதே நடைமுறை.
ஆனால் சதொசவிற்கு கொடுக்கப்பட்ட அரிசி தனியார் கடைகளில் 105 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
இதில் இரண்டு தவறுகள் நடைபெற்றுள்ளன. ஒன்று ஜனாதிபதி சொன்ன அரிசி விலைக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. இரண்டாவது சதொசாவிற்கு கொடுக்கப்பட்ட அரசி எவ்வாறு வெளிக்கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மிகபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக நம்புகின்றேன்.
அது தொடர்பில் சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வரி குறைப்பை செய்த பின்னர் பொருள்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருடன் இணைந்து வேலை திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். வரி குறைப்பின் ஊடாக பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டு மக்கள் நன்மையடைய வேண்டும் – என்றார்.