யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறு குற்றம் புரிபவர்கள் பொலிஸாரிடமிருந்து விடுதலை யாவதற்கு மணல் கடத்தல் காரர்களையே அணுகுகின்றார்கள். அந்தளவுக்கு யாழ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறு குற்றம் புரிபவர்கள் பொலிஸாரிடமிருந்து விடுதலை யாவதற்கு மணல் கடத்தல் காரர்களையே அணுகுகின்றார்கள். அந்தளவுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸாருக்கும் மணல் கடத்தல் காரர்களுக்குமிடையில் நெருக்கம் உள்ளது.
அரியாலையில் கடமையிலுள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இட மாற்றம் செய்யுங்கள் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத் தரணியுமான ரெமிடியஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப் படுத்து வதற்கான கலந்துரையாடல் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பொலிஸார் முன்னிலையிலேயே இந்த குற்றச் சாட்டினை முன்வைத்தார்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அரியாலை, வடமராட்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. நான் யாழ்ப்பாணம் மாநகர சபை பிரதேசத்தை பிரதிநிதித்துவ படுத்துவான் என்ற வகையில் அரியாலையில் தாராளமான மண் அகழ்வு சட்டத்திற்கு முரணாக நடைபெறுகின்றது.
இரு பாதைகள் ஊடாகவே மண்கடத்தல்கள் நடைபெறுகின்றது. மணல் அகழ்வது குறித்து பொலிஸாருக்கு தொலைபேசியில் அறிவித்தால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வர முதலே கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் ஊடாக தகவல் வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்கள், தலைக்கு கவசம் அணியாதவர்கள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்து பவர்கள் பொலிஸாரிடம் சிக்கினால் உடனடியாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களு க்கு தெரிவிக்கின்றனர்.
அவர்கள் தங்களின் தொலைபேசி ஊடாகவே பொலிஸாருடன் பேசி விடுக்கின்றனர். இந்தளவுக்கு பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்குமிடையில் நெருக்கம் காணப்படுகின்றது.அரியாலையில் கடமையில் இருக்கும் அத்தனை பொலிஸாரையும் இடமாற்றம் செய்யுங்கள். அங்கு புதிய வேறு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமி யுங்கள் தானாக மணல் கடத்தல் ஓரளவு குறையும்.என்றார்.
இதற்குப் பதில் அளித்த யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியதசகர் மகேஷ் சேனாரட்ன,
யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற சாதாரண மக்களுக்கு மணல் தேவையாகவுள்ளது. நாம் மணல் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்களை பிடிக்க வேண்டும். நாம் தற்பொழுது முழுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நாம் சட்ட விரோத மண் அகழ் வினை முழுமையாக கட்டுப்படுத்த ஒத்துழைப்பினை தருகின்றோம். எமக்கு மக்கள் தகவலை தந்து உதவ வேண்டும்.என்றார்.
அரியாலையில் கடமையிலுள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இட மாற்றம் செய்யுங்கள் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத் தரணியுமான ரெமிடியஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப் படுத்து வதற்கான கலந்துரையாடல் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பொலிஸார் முன்னிலையிலேயே இந்த குற்றச் சாட்டினை முன்வைத்தார்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அரியாலை, வடமராட்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. நான் யாழ்ப்பாணம் மாநகர சபை பிரதேசத்தை பிரதிநிதித்துவ படுத்துவான் என்ற வகையில் அரியாலையில் தாராளமான மண் அகழ்வு சட்டத்திற்கு முரணாக நடைபெறுகின்றது.
இரு பாதைகள் ஊடாகவே மண்கடத்தல்கள் நடைபெறுகின்றது. மணல் அகழ்வது குறித்து பொலிஸாருக்கு தொலைபேசியில் அறிவித்தால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வர முதலே கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் ஊடாக தகவல் வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்கள், தலைக்கு கவசம் அணியாதவர்கள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்து பவர்கள் பொலிஸாரிடம் சிக்கினால் உடனடியாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களு க்கு தெரிவிக்கின்றனர்.
அவர்கள் தங்களின் தொலைபேசி ஊடாகவே பொலிஸாருடன் பேசி விடுக்கின்றனர். இந்தளவுக்கு பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்குமிடையில் நெருக்கம் காணப்படுகின்றது.அரியாலையில் கடமையில் இருக்கும் அத்தனை பொலிஸாரையும் இடமாற்றம் செய்யுங்கள். அங்கு புதிய வேறு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமி யுங்கள் தானாக மணல் கடத்தல் ஓரளவு குறையும்.என்றார்.
இதற்குப் பதில் அளித்த யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியதசகர் மகேஷ் சேனாரட்ன,
யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற சாதாரண மக்களுக்கு மணல் தேவையாகவுள்ளது. நாம் மணல் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்களை பிடிக்க வேண்டும். நாம் தற்பொழுது முழுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நாம் சட்ட விரோத மண் அகழ் வினை முழுமையாக கட்டுப்படுத்த ஒத்துழைப்பினை தருகின்றோம். எமக்கு மக்கள் தகவலை தந்து உதவ வேண்டும்.என்றார்.