மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி லக்னோவில் திறந்து வைத்தார். சிலை அமைக்கும் பணிகள் முடிவ...
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச் சிலையை பிரதமர் மோடி லக்னோவில் திறந்து வைத்தார்.
சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சிலையை பிரதமர் மோடி நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமாகியிருந்தார்.
கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயற்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் என பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாய் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் பதவி வகித்தார். இதையடுத்து அவருக்கு அங்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.