ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கை இறுதிநேரத்தில் கைவிடப்பட்டுள்ளது. ராஜிதவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அ...
ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கை இறுதிநேரத்தில் கைவிடப்பட்டுள்ளது. ராஜிதவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் லங்கா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறை மருத்துவரின் பரிசோதனையின் பின்னரே அவரது இடமாற்ற நடவடிக்கை கைவிடப்பட்டது.
லங்கா வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் டிசம்பர் 27 ம் திகதி குற்றவியல் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் ஷாலினி பெரேர உத்தரவிட்டிருந்தார்.
நாரஹேனபிட்டிய லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியில் லங்கா வைத்தியசாலையிலிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜிதவை, இன்று காலையில் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை வைத்தியர் பரிசோதனை மேற்கொண்டார். இதன்பின், ராஜித ஆபத்தான நிலைமையில் இல்லையென்றும், அவரை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கலாமென்றும் சிறைச்சாலை ஆணையாளருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, அவரை வெலிக்கடைக்கு கொண்டு செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், லங்கா வைத்தியசாலைக்கு சென்றனர்.
அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதை சிறைச்சாலை அதிகாரிகளும் உறுதிசெய்தனர்.
சிறை மருத்துவரின் பரிசோதனையின் பின்னரே அவரது இடமாற்ற நடவடிக்கை கைவிடப்பட்டது.
லங்கா வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் டிசம்பர் 27 ம் திகதி குற்றவியல் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் ஷாலினி பெரேர உத்தரவிட்டிருந்தார்.
நாரஹேனபிட்டிய லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியில் லங்கா வைத்தியசாலையிலிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜிதவை, இன்று காலையில் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை வைத்தியர் பரிசோதனை மேற்கொண்டார். இதன்பின், ராஜித ஆபத்தான நிலைமையில் இல்லையென்றும், அவரை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கலாமென்றும் சிறைச்சாலை ஆணையாளருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, அவரை வெலிக்கடைக்கு கொண்டு செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், லங்கா வைத்தியசாலைக்கு சென்றனர்.
அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதை சிறைச்சாலை அதிகாரிகளும் உறுதிசெய்தனர்.