கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ‘செழிப்பான கிராமம்’ என்ற திட்டத்தை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் செயற்பட...
கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ‘செழிப்பான கிராமம்’ என்ற திட்டத்தை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பொது மக்களின் பங்களிப்புடன் நாட்டிலுள்ள 14 ஆயிரத்து 21 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன வியாழக்கிழமை (19) கொழும்பில் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் கிராமப்புற மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர்.
‘‘கிராமங்களின் வசதிகளை அபிவிருத்தி செய்து தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் செழிப்பான கிராமம் என்ற பெயரில் பொது மக்களின் பங்களிப்புடன் கிராம அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
ஒரு கிராம அலுவலர் பிரிவில் 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என்றார் அமைச்சர்.
பதவி விலகிய ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நடைமுறைப்படுத்தி வந்த கம்பெரலிய எனும் கிராம எழுச்சித் திட்டம் ஆட்சி மாற்றத்துடன் இடைநிறுத்தப்பட்டது.
கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டவற்றைத் தவிர ஏனைய அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் இந்த ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் இடைநிறுத்தியது.
இப்போது அதற்குப் பதலீடான ‘செழிப்பான கிராமம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை 2020 ஆம் ஆண்டு தை (ஜனவரி) மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும், அடுத்த மாதத்தில் இருந்து தலா 20 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதி, பாடசாலை, பாலம், வீதி போன்றன இந்த நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
கிராமிய விவசாயத்துறையை கட்டியெழுப்பும் வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. கறுவா, மிளகு, மஞ்சள், உளுந்து போன்ற உற்பத்திகளை நாட்டில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளனர் என்று ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
250 மில்லியன் டொலர் முதலீட்டில் 30 அடுக்கு மாடிகளைக் கொண்ட பல்நோக்குக் கட்டடத் தொகுதியொன்றைக் கொழும்பில் கட்டுவதற்கும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பொது மக்களின் பங்களிப்புடன் நாட்டிலுள்ள 14 ஆயிரத்து 21 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன வியாழக்கிழமை (19) கொழும்பில் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் கிராமப்புற மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றார் அமைச்சர்.
‘‘கிராமங்களின் வசதிகளை அபிவிருத்தி செய்து தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் கிராம மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் செழிப்பான கிராமம் என்ற பெயரில் பொது மக்களின் பங்களிப்புடன் கிராம அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
ஒரு கிராம அலுவலர் பிரிவில் 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என்றார் அமைச்சர்.
பதவி விலகிய ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நடைமுறைப்படுத்தி வந்த கம்பெரலிய எனும் கிராம எழுச்சித் திட்டம் ஆட்சி மாற்றத்துடன் இடைநிறுத்தப்பட்டது.
கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டவற்றைத் தவிர ஏனைய அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் இந்த ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் இடைநிறுத்தியது.
இப்போது அதற்குப் பதலீடான ‘செழிப்பான கிராமம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை 2020 ஆம் ஆண்டு தை (ஜனவரி) மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும், அடுத்த மாதத்தில் இருந்து தலா 20 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வசதி, பாடசாலை, பாலம், வீதி போன்றன இந்த நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
கிராமிய விவசாயத்துறையை கட்டியெழுப்பும் வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது. கறுவா, மிளகு, மஞ்சள், உளுந்து போன்ற உற்பத்திகளை நாட்டில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளனர் என்று ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
250 மில்லியன் டொலர் முதலீட்டில் 30 அடுக்கு மாடிகளைக் கொண்ட பல்நோக்குக் கட்டடத் தொகுதியொன்றைக் கொழும்பில் கட்டுவதற்கும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.