இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடி பற்றிய தகவல்களை அமெரிக்காவின் எக்கனொமிக் டைம்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத...
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் மோசடி பற்றிய தகவல்களை அமெரிக்காவின் எக்கனொமிக் டைம்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆபிரிக்கா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களில் இருந்து இந்த மோசடிகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2356462532, 212621-001782 மற்றும் 212621001782 ஆகிய தொலைபேசிகளில் இருந்து வருகின்ற அழைப்புக்கள் மற்றும் தவறிய அழைப்புக்களுக்கு மீள் அழைப்பு எடுக்க வேண்டாம் என்கிற எச்சரிக்கையை எக்கனொமிக் டைம்ஸ் மக்களுக்கு வழங்கியுள்ளது.
அவ்வாறு மீள் அழைப்புக்களை குறித்த இலக்கங்களுக்கு மேற்கொண்டால் பிரீமியம் மீள் அழைப்புக்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவதோடு பெறுகின்ற அழைப்புக்களின் இலக்கங்களிலிருந்து பணம் சூறையாடப்படும் கும்பல் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் அழைப்புக்களை மேற்கொள்ளும் போது அழைப்பை இயக்கும் நபரின் தொலைபேசி மாதாந்தப் பட்டியலில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என்றும் அதனால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் எக்கனொமிக் டைம்ஸ் இணையத்தளம் கூறுகின்றது.
எவ்வாறாயினும் இதுபற்றி தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேசவல்ல அதிகாரியுடன் தொடர்புகொண்டு வினவினோம்.
அதற்கு பதிலளித்த அவர், சமூக ஊடகங்களில் இப்படியான தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும் ஆனால் பாதிக்கப்பட்டதாக இதுவரை எவரு;ம எழுத்துமூலம் முறைப்பாடு வழங்கவில்லை என்றும் கூறினார்.
பாதிப்பு ஏற்பட்டதாக எவராவது எழுத்துமூலம் அறிவித்தால் அதற்கு தகுந்த நடவடிக்கையை ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆபிரிக்கா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்களில் இருந்து இந்த மோசடிகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2356462532, 212621-001782 மற்றும் 212621001782 ஆகிய தொலைபேசிகளில் இருந்து வருகின்ற அழைப்புக்கள் மற்றும் தவறிய அழைப்புக்களுக்கு மீள் அழைப்பு எடுக்க வேண்டாம் என்கிற எச்சரிக்கையை எக்கனொமிக் டைம்ஸ் மக்களுக்கு வழங்கியுள்ளது.
அவ்வாறு மீள் அழைப்புக்களை குறித்த இலக்கங்களுக்கு மேற்கொண்டால் பிரீமியம் மீள் அழைப்புக்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவதோடு பெறுகின்ற அழைப்புக்களின் இலக்கங்களிலிருந்து பணம் சூறையாடப்படும் கும்பல் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் அழைப்புக்களை மேற்கொள்ளும் போது அழைப்பை இயக்கும் நபரின் தொலைபேசி மாதாந்தப் பட்டியலில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என்றும் அதனால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் எக்கனொமிக் டைம்ஸ் இணையத்தளம் கூறுகின்றது.
எவ்வாறாயினும் இதுபற்றி தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேசவல்ல அதிகாரியுடன் தொடர்புகொண்டு வினவினோம்.
அதற்கு பதிலளித்த அவர், சமூக ஊடகங்களில் இப்படியான தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும் ஆனால் பாதிக்கப்பட்டதாக இதுவரை எவரு;ம எழுத்துமூலம் முறைப்பாடு வழங்கவில்லை என்றும் கூறினார்.
பாதிப்பு ஏற்பட்டதாக எவராவது எழுத்துமூலம் அறிவித்தால் அதற்கு தகுந்த நடவடிக்கையை ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.