அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள ஊர்வன பண்ணைகளில் மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் கொடும் துன்பங்கள் அம்பலமாகியுள்ளன. பீற்றா ...
அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள ஊர்வன பண்ணைகளில் மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் கொடும் துன்பங்கள் அம்பலமாகியுள்ளன. பீற்றா (Peta Asia) என்ற விலங்குகள் ஆர்வ நிறுவனத்தின் புலனாய்வு ஆய்வுகளில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்தவகையில் இப்போது வியட்நாமில் பல்லாயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்பட்டு வன்முறையில் கொல்லப்படுவது புலனாய்வு ஆராய்வில் தெரியவந்துள்ளது.
உலகெங்கிலும் விற்கப்படும் ஆடம்பர தோல் பைகள், பட்டிகள் (Belt), மணிக்கூட்டு பட்டிகள் உட்பட பல்வேறு ஆடம்பர உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதற்கு குறித்த முதலைகள் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றன.
இந்த உற்பத்திகளுக்கு முன்னர், தொழிலாளர்கள் முதலைகளை எலக்ற்ரோ ஷொக் செய்து, பின்னர் முதலைகளின் கழுத்தில் வெட்டுவதன் மூலமும் உலோகத் தண்டுகளைக் கொண்டு முதுகெலும்புகளை அடித்தும் கொலை செய்கின்றனர்.
மேலும் முதுகெலும்பு துண்டிக்கப்பட்டு முதலைகளின் இரத்த நாளங்கள் வெட்டப்பட்ட பின்னர் முதலைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விழிப்புடன் இருப்பதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்பின்னர், முதலைகளை அருகிலுள்ள அறைக்குள் கொண்டு சென்று அவைகளின் தோலை உரித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த செயற்பாட்டுக்கு ஒரு விலங்குக்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும்.
இதேவேளை, இத்தனை செயற்பாட்டுக்கும் உயிருடன் இருக்கும் முதலைகள் தோல் உரித்தெடுக்கப்பட்ட பின்னரும் உயிருடன் நகர்வதை புலனாய்வு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கடும் துன்பத்தை முதலைகள் அனுபவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு முதலைகள் கொலை நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் நிலையில் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஈவிரக்கமற்ற செயல் என விலங்குகள் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியான, புலனாய்வாளர்களின் மற்றொரு ஆய்வில், பண்ணையொன்றில் பல்லாயிரக்கணக்கான முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1,500 முதலைகள் படுகொலை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சுமார் 5 ஆயிரம் முதலைகள் சிறிய கொங்கிரீட் அடைப்புகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முதலைகளின் உடலின் நீளத்தை விட சற்று சிறியனவாகவும் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகமான முதலைகள் ஒன்றாக வைக்கப்படும்போது, காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவை பொதுவாக தொற்று மற்றும் நோய்க்கு வழிவகுக்கவும் செய்கிறது. இந்த சூழலில் பண்ணைகளிலும் முதலைகள் துன்புறுத்தப்பட்டே பின்னர் கொலை செய்யப்படும்போதும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகின்றன என புலனாய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பீற்றா என்ற விலங்குகள் ஆர்வ நிறுவனம் மூன்று கண்டங்களில் உள்ள ஊர்வன பண்ணைகளில் இவ்வாறு இடம்பெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் இப்போது வியட்நாமில் பல்லாயிரக்கணக்கான முதலைகள் வளர்க்கப்பட்டு வன்முறையில் கொல்லப்படுவது புலனாய்வு ஆராய்வில் தெரியவந்துள்ளது.
உலகெங்கிலும் விற்கப்படும் ஆடம்பர தோல் பைகள், பட்டிகள் (Belt), மணிக்கூட்டு பட்டிகள் உட்பட பல்வேறு ஆடம்பர உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதற்கு குறித்த முதலைகள் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றன.
இந்த உற்பத்திகளுக்கு முன்னர், தொழிலாளர்கள் முதலைகளை எலக்ற்ரோ ஷொக் செய்து, பின்னர் முதலைகளின் கழுத்தில் வெட்டுவதன் மூலமும் உலோகத் தண்டுகளைக் கொண்டு முதுகெலும்புகளை அடித்தும் கொலை செய்கின்றனர்.
மேலும் முதுகெலும்பு துண்டிக்கப்பட்டு முதலைகளின் இரத்த நாளங்கள் வெட்டப்பட்ட பின்னர் முதலைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விழிப்புடன் இருப்பதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்பின்னர், முதலைகளை அருகிலுள்ள அறைக்குள் கொண்டு சென்று அவைகளின் தோலை உரித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த செயற்பாட்டுக்கு ஒரு விலங்குக்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும்.
இதேவேளை, இத்தனை செயற்பாட்டுக்கும் உயிருடன் இருக்கும் முதலைகள் தோல் உரித்தெடுக்கப்பட்ட பின்னரும் உயிருடன் நகர்வதை புலனாய்வு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கடும் துன்பத்தை முதலைகள் அனுபவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு முதலைகள் கொலை நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் நிலையில் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஈவிரக்கமற்ற செயல் என விலங்குகள் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியான, புலனாய்வாளர்களின் மற்றொரு ஆய்வில், பண்ணையொன்றில் பல்லாயிரக்கணக்கான முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 1,500 முதலைகள் படுகொலை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் சுமார் 5 ஆயிரம் முதலைகள் சிறிய கொங்கிரீட் அடைப்புகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முதலைகளின் உடலின் நீளத்தை விட சற்று சிறியனவாகவும் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகமான முதலைகள் ஒன்றாக வைக்கப்படும்போது, காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், அவை பொதுவாக தொற்று மற்றும் நோய்க்கு வழிவகுக்கவும் செய்கிறது. இந்த சூழலில் பண்ணைகளிலும் முதலைகள் துன்புறுத்தப்பட்டே பின்னர் கொலை செய்யப்படும்போதும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகின்றன என புலனாய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பீற்றா என்ற விலங்குகள் ஆர்வ நிறுவனம் மூன்று கண்டங்களில் உள்ள ஊர்வன பண்ணைகளில் இவ்வாறு இடம்பெறும் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது.