வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் என நாடாள...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசியகட்சியின் யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாகவும் இணையத்தளங்களில் வெளியான போலிச் செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும். எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யாழ் தேர்தல் தோகுதியில் போட்டியிடுவேன் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாகவும் இணையத்தளங்களில் வெளியான போலிச் செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும். எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யாழ் தேர்தல் தோகுதியில் போட்டியிடுவேன் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.