அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரை போட்டியிடாமலிருக்க செய்யும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டதை செய்திப்பிரிவு ம...
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரை போட்டியிடாமலிருக்க செய்யும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டதை செய்திப்பிரிவு முதன்முதலில் வெளிச்சமிட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது அந்த நகர்வு. எம்.ஏ.சுமந்திரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக்கும் நோக்கத்துடன், கனடா கிளையின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட அந்த நகர்வு, தற்போது தற்காலிகமாகதோல்வியடைந்துள்ளது.
தமிழ்பக்கம் அந்த செய்தியை முதன்முதலில் வெளியிட்டதை தொடர்ந்து, அரசியலரங்கில் அது மிகப்பெரிய விவகாரமாக பேசப்பட்டது. பல மூத்த தமிழ் அரசு கட்சி தலைவர்களிற்கும் அதன் பின்னரே விடயம் தெரிய வந்தது, ஊடகங்களிலும் முக்கிய விவகாரமாக பேசப்பட்டது. முக்கிய கவனயீர்ப்பான விடயமா கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களிற்கும் அதற்கு ஏற்பட்ட எதிர்மறையான பிரதிபலப்பை தொடர்ந்து, அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது என்ற தகவலையும், தமிழ் பக்கம் இப்பொழுது முதன்முதலில் பிரசுரிக்கிறது.
இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
சில தினங்களின் முன்னர், மாவை சேனாதிராசாவை நேரில் சந்தித்து, தனது தரப்பு விளக்கங்களை அளித்து, இந்த விவகாரத்திலிருந்து சுமந்திரன் பின்வாங்கிக் கொண்டார் என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்தது.
கடந்த சனிக்கிழமை மாவை சேனாதிராசாவை, எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, "உங்களை வேட்பாளர் பட்டியலில் இல்லாமல் செய்யும் எந்த நகர்வையும் நான் மேற்கொள்ளவில்லை. அது குறித்து பேசியதுமில்லை. ஆனால், உங்களிற்கும், எனக்குமிடையில் பிரச்சனையை உண்டாக்க சில தரப்புக்கள் திட்டமிட்டு, இந்த பிரச்சனையை உருவாக்கியுள்ளனர். என்ற சாரப்பட விளக்கமளித்திருக்கிறார்.
எனினும், தன்னை வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அதன் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை விரல் நுனியில் பெற்றிருந்த மாவை, அந்த சந்திப்பில் அவை எதையும் வெளிப்படுத்தாமல்- எதுவும் தெரியாததை போல- அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பு நடந்தது சனிக்கிழமை. அதற்கு முதல்நாள்- வெள்ளிக்கிழமை - தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்பக்கத்திடம் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். "மாவை சேனாதிராசா நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும். மாவட்டக்குழு விரைவில் கூடி, அது குறித்த முடிவொன்றையும் அறிவிக்கும். இரா.சம்பந்தன் செயற்பட முடியாத தன்மை ஏற்பட்டால் கூட்டமைப்பின் தலைவராக மாவை பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவித்திருந்தார். அவர் இப்படி சொன்னதற்கு மறுநாள், மாவை சேனாதிராசாவை சந்தித்து சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை சுமந்திரன் குறிவைத்துள்ளமை, அதற்காக அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிற்கு தீவிரமாக பயணம் செய்வது, சுமந்திரன் ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சிக்குள் எதிர்மறையான அபிப்பிராயத்தை தீவிரமாக உருவாக்கியுள்ளது. எதிர்வரும் காலத்தில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவிக்கும் என்பது நிச்சயம்,
தற்போதைய நிலைமையில் மாவை சேனாதிராசா அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவது நிச்சயமாகியுள்ளது,
இதேவேளை, சுமந்திரன் அணியினரும், மாவைக்கு எதிரான நகர்வில் தாம் ஈடுபடவில்லையென தனித்தனியாக விளக்கமளித்து வருகின்றனர். அண்மையில், தென்மராட்சியில் நடந்த கட்சியின் தொகுதிக்கிளை கூட்டத்தில், "மாவையை தேர்தலில் இருந்து போட்டியிடாமல் ஒதுங்கச் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. சயந்தன் கூட, அப்படி கதைத்ததாக அறிந்தோம்" என, கட்சியின் பொருளாளர் கனகசபாபதி தெரிவித்திருந்தார். மாவை சேனாதிராசா குடும்பத்திற்கும், கனகசபாபதி குடும்பத்திற்குமுள்ள நெருக்கமான உறவு ஊர் அறிந்தது. மாவையின்
மனநிலையை, கனகசபாபதி வெளிப்படுத்தியதாக கருதப்படுகிறது.
இதன்பின்னர் உரையாறிய சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் கே.சயந்தன், *மாவைக்கு எதிரான இந்த முயற்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அது பற்றி எங்கும் கதைக்கவில்லை" என விளக்கமளித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது அந்த நகர்வு. எம்.ஏ.சுமந்திரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக்கும் நோக்கத்துடன், கனடா கிளையின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட அந்த நகர்வு, தற்போது தற்காலிகமாகதோல்வியடைந்துள்ளது.
தமிழ்பக்கம் அந்த செய்தியை முதன்முதலில் வெளியிட்டதை தொடர்ந்து, அரசியலரங்கில் அது மிகப்பெரிய விவகாரமாக பேசப்பட்டது. பல மூத்த தமிழ் அரசு கட்சி தலைவர்களிற்கும் அதன் பின்னரே விடயம் தெரிய வந்தது, ஊடகங்களிலும் முக்கிய விவகாரமாக பேசப்பட்டது. முக்கிய கவனயீர்ப்பான விடயமா கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களிற்கும் அதற்கு ஏற்பட்ட எதிர்மறையான பிரதிபலப்பை தொடர்ந்து, அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது என்ற தகவலையும், தமிழ் பக்கம் இப்பொழுது முதன்முதலில் பிரசுரிக்கிறது.
இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாவை சேனாதிராசா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
சில தினங்களின் முன்னர், மாவை சேனாதிராசாவை நேரில் சந்தித்து, தனது தரப்பு விளக்கங்களை அளித்து, இந்த விவகாரத்திலிருந்து சுமந்திரன் பின்வாங்கிக் கொண்டார் என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்தது.
கடந்த சனிக்கிழமை மாவை சேனாதிராசாவை, எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, "உங்களை வேட்பாளர் பட்டியலில் இல்லாமல் செய்யும் எந்த நகர்வையும் நான் மேற்கொள்ளவில்லை. அது குறித்து பேசியதுமில்லை. ஆனால், உங்களிற்கும், எனக்குமிடையில் பிரச்சனையை உண்டாக்க சில தரப்புக்கள் திட்டமிட்டு, இந்த பிரச்சனையை உருவாக்கியுள்ளனர். என்ற சாரப்பட விளக்கமளித்திருக்கிறார்.
எனினும், தன்னை வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அதன் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை விரல் நுனியில் பெற்றிருந்த மாவை, அந்த சந்திப்பில் அவை எதையும் வெளிப்படுத்தாமல்- எதுவும் தெரியாததை போல- அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பு நடந்தது சனிக்கிழமை. அதற்கு முதல்நாள்- வெள்ளிக்கிழமை - தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்பக்கத்திடம் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். "மாவை சேனாதிராசா நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட வேண்டும். மாவட்டக்குழு விரைவில் கூடி, அது குறித்த முடிவொன்றையும் அறிவிக்கும். இரா.சம்பந்தன் செயற்பட முடியாத தன்மை ஏற்பட்டால் கூட்டமைப்பின் தலைவராக மாவை பொறுப்பேற்க வேண்டும்" என தெரிவித்திருந்தார். அவர் இப்படி சொன்னதற்கு மறுநாள், மாவை சேனாதிராசாவை சந்தித்து சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை சுமந்திரன் குறிவைத்துள்ளமை, அதற்காக அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிற்கு தீவிரமாக பயணம் செய்வது, சுமந்திரன் ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சிக்குள் எதிர்மறையான அபிப்பிராயத்தை தீவிரமாக உருவாக்கியுள்ளது. எதிர்வரும் காலத்தில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவிக்கும் என்பது நிச்சயம்,
தற்போதைய நிலைமையில் மாவை சேனாதிராசா அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவது நிச்சயமாகியுள்ளது,
இதேவேளை, சுமந்திரன் அணியினரும், மாவைக்கு எதிரான நகர்வில் தாம் ஈடுபடவில்லையென தனித்தனியாக விளக்கமளித்து வருகின்றனர். அண்மையில், தென்மராட்சியில் நடந்த கட்சியின் தொகுதிக்கிளை கூட்டத்தில், "மாவையை தேர்தலில் இருந்து போட்டியிடாமல் ஒதுங்கச் செய்யும் முயற்சிகள் நடக்கிறது. சயந்தன் கூட, அப்படி கதைத்ததாக அறிந்தோம்" என, கட்சியின் பொருளாளர் கனகசபாபதி தெரிவித்திருந்தார். மாவை சேனாதிராசா குடும்பத்திற்கும், கனகசபாபதி குடும்பத்திற்குமுள்ள நெருக்கமான உறவு ஊர் அறிந்தது. மாவையின்
மனநிலையை, கனகசபாபதி வெளிப்படுத்தியதாக கருதப்படுகிறது.
இதன்பின்னர் உரையாறிய சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் கே.சயந்தன், *மாவைக்கு எதிரான இந்த முயற்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அது பற்றி எங்கும் கதைக்கவில்லை" என விளக்கமளித்தார்.