பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ச தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார். அடுத்த மாதம் இந்த பயணம் இடம்பெறும். இரண்ட...
பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ச தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்லவுள்ளார்.
அடுத்த மாதம் இந்த பயணம் இடம்பெறும். இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லவுள்ள மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுவார்.
வாரணாசி, திருப்பதி ஆன்மீக தலங்களிற்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.
கடந்த மாதம் இந்தியா சென்ற கோட்டாபய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். மஹிந்த ராஜபக்சவும், மோடிக்கு அழைப்பு விடுப்பார்.
கோட்டாபய ராஜபக்சவின் இந்திய பயணத்தை போலவே, மிகக்குறைந்தளவான பிரதிநிதிகளுடனேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வெளிநாட்டு பயணங்களிற்கு தனி விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான பரிவாரங்களும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் இந்த பயணம் இடம்பெறும். இரண்டு நாள் பயணமாக இந்தியா செல்லவுள்ள மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுவார்.
வாரணாசி, திருப்பதி ஆன்மீக தலங்களிற்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.
கடந்த மாதம் இந்தியா சென்ற கோட்டாபய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். மஹிந்த ராஜபக்சவும், மோடிக்கு அழைப்பு விடுப்பார்.
கோட்டாபய ராஜபக்சவின் இந்திய பயணத்தை போலவே, மிகக்குறைந்தளவான பிரதிநிதிகளுடனேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வெளிநாட்டு பயணங்களிற்கு தனி விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான பரிவாரங்களும் சென்றமை குறிப்பிடத்தக்கது.