கோட்டா – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் சீனா இந்த ஒப்பந்தம் குறித்த...
கோட்டா – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தாலும் சீனா இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுவரும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மாற்றப்படாது என்றும் பிற சீன முதலீட்டு அபிவிருத்திப்பணிகள் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தாலும், அரசாங்கத்தில் உள்ள மற்றவர்கள் மாறியமைக்கப்படும் என கூறியுள்ளனர்.
ஆகவே சில நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும் இலங்கையில் உள்ள அனைத்து சீன அபிவிருத்தி திட்டங்களும் முன்னோக்கி கொண்டுசெல்லப்படும் என்று வாங் ஜி அவரது விஜயத்தின்போது உறுதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த 13 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர், 14 ஆம் திகதி மதியம் 12.15 மணிக்கு நாட்டைவிட்டு வெளியேறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த குறுகிய நேரப் பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். அத்தோடு மரியாதையை நிமித்தமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சீன அதிகாரியாக வாங் ஜி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுவரும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மாற்றப்படாது என்றும் பிற சீன முதலீட்டு அபிவிருத்திப்பணிகள் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தாலும், அரசாங்கத்தில் உள்ள மற்றவர்கள் மாறியமைக்கப்படும் என கூறியுள்ளனர்.
ஆகவே சில நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும் இலங்கையில் உள்ள அனைத்து சீன அபிவிருத்தி திட்டங்களும் முன்னோக்கி கொண்டுசெல்லப்படும் என்று வாங் ஜி அவரது விஜயத்தின்போது உறுதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த 13 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு இலங்கை வரும் சீன வெளிவிவகார அமைச்சர், 14 ஆம் திகதி மதியம் 12.15 மணிக்கு நாட்டைவிட்டு வெளியேறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்த குறுகிய நேரப் பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். அத்தோடு மரியாதையை நிமித்தமாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சீன அதிகாரியாக வாங் ஜி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.