மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிடுகள் செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிடுகள் செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் குறுக்கே நின்றபோதும், தனது கடமைகளை செய்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
“ரணில் விசாரணைகளுக்கு எதிராக தடைகளை வைத்தார். விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு எதிரான மோசடி விசாரணைகளைத் தொடங்கினார். சில எம்.பி.க்களின் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த பொலிஸ் அதிகாரிகள் பணிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், தடைகள் இருந்தபோதிலும் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து ஒப்படைக்க ஆவணமாக்கல் பணிகளை நான் செய்தேன்” என மைத்திரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஓய்வுபெறும் ஜனாதிபதிகள் வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளும் உரித்துள்ளதெனவும், அதனாலேயே தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஜனாதிபதிகள் பதவியை விட்டு விலகிய பின்னர் அவர்கள் அல்லது அவர்களது மனைவியர் அனைவருமே இதுபோன்ற வசதியை பயன்படுத்துவதாகவும், 1984 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஜனாதிபதிகள் உரிமைச் சட்டத்தில் இது வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரணில் குறுக்கே நின்றபோதும், தனது கடமைகளை செய்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
“ரணில் விசாரணைகளுக்கு எதிராக தடைகளை வைத்தார். விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு எதிரான மோசடி விசாரணைகளைத் தொடங்கினார். சில எம்.பி.க்களின் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த பொலிஸ் அதிகாரிகள் பணிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், தடைகள் இருந்தபோதிலும் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து ஒப்படைக்க ஆவணமாக்கல் பணிகளை நான் செய்தேன்” என மைத்திரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஓய்வுபெறும் ஜனாதிபதிகள் வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளும் உரித்துள்ளதெனவும், அதனாலேயே தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஜனாதிபதிகள் பதவியை விட்டு விலகிய பின்னர் அவர்கள் அல்லது அவர்களது மனைவியர் அனைவருமே இதுபோன்ற வசதியை பயன்படுத்துவதாகவும், 1984 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஜனாதிபதிகள் உரிமைச் சட்டத்தில் இது வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.