கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார். கந்தரோடை அருள்விநாயகர் ...
கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்.
கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலையத்தினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நிலையத் தலைவர் சின்னராசா தலைமையில் நிலைய வளாகத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமும், யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடமும் பிடித்த மாணவனான நிலக்ஷன் மற்றும் பளு தூக்கல் வீராங்கனை ஆர்சிகா ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி.தெற்கு பிரதேச சபை (சுன்னாகம்) யின் கந்தரோடை வட்டாரத்தின் உறுப்பினர் திருமதி. யோகாதேவி ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவிப்புகளை வழங்கி வைத்தனர்.
விருந்தினர்களுடன் நிலைய அங்கத்தவர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலையத்தினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நிலையத் தலைவர் சின்னராசா தலைமையில் நிலைய வளாகத்தில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமும், யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடமும் பிடித்த மாணவனான நிலக்ஷன் மற்றும் பளு தூக்கல் வீராங்கனை ஆர்சிகா ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் வலி.தெற்கு பிரதேச சபை (சுன்னாகம்) யின் கந்தரோடை வட்டாரத்தின் உறுப்பினர் திருமதி. யோகாதேவி ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவிப்புகளை வழங்கி வைத்தனர்.
விருந்தினர்களுடன் நிலைய அங்கத்தவர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.