குடாநாட்டு நீர்விநியோகம் குறித்து வடக்கு ஆளுனரக்கு, வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குட...
குடாநாட்டு நீர்விநியோகம் குறித்து வடக்கு ஆளுனரக்கு, வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,
குடாநாட்டுக்கான குடிநீர் பிரச்சினை கடந்த பல தசாப்தங்களாக கானல் நீராகவே காணப்படுகின்றது. மிகவும் குறிப்பாக,யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் தீவகப் பகுதிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இது இருந்து வருகின்றது.
தங்களால் குறிப்பிடப்படும் கப்பூது வெளி அந்தணன் வெளி குளம் அமைத்தல் தொடர்பாக நாம் விமர்சிக்க விரும்பவில்லை. எனினும், கீழ் பாலியாற்று வடிநிலத்திலிருந்து யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டம் தொடர்பாக 04.10.2018 ஆம் திகதிய வடக்கு மாகாணசபையின் 133 ஆவது அமர்வில் ஓர் முன்மொழிவு எம்மால் முன்வைக்கப்பட்டு கௌரவ முதலமைச்சரால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் விநியோகம் தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய ஒரே தீர்மானமும் இதுவே.
இந்தவிடயம் தொடர்பாக முன்னைநாள் ஆளுநருக்கு நாம் எழுதிய 22.01.2019ஆம் திகதிய கடிதத்திற்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது.
எனவே ஏற்கெனவே சாதகமான பல நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றி வைக்க தொடர் நடவடிக்கை எடுத்துதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,
குடாநாட்டுக்கான குடிநீர் பிரச்சினை கடந்த பல தசாப்தங்களாக கானல் நீராகவே காணப்படுகின்றது. மிகவும் குறிப்பாக,யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் தீவகப் பகுதிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இது இருந்து வருகின்றது.
தங்களால் குறிப்பிடப்படும் கப்பூது வெளி அந்தணன் வெளி குளம் அமைத்தல் தொடர்பாக நாம் விமர்சிக்க விரும்பவில்லை. எனினும், கீழ் பாலியாற்று வடிநிலத்திலிருந்து யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டம் தொடர்பாக 04.10.2018 ஆம் திகதிய வடக்கு மாகாணசபையின் 133 ஆவது அமர்வில் ஓர் முன்மொழிவு எம்மால் முன்வைக்கப்பட்டு கௌரவ முதலமைச்சரால் வழிமொழியப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் விநியோகம் தொடர்பாக மாகாண சபை நிறைவேற்றிய ஒரே தீர்மானமும் இதுவே.
இந்தவிடயம் தொடர்பாக முன்னைநாள் ஆளுநருக்கு நாம் எழுதிய 22.01.2019ஆம் திகதிய கடிதத்திற்கு தங்கள் அவதானம் கோரப்படுகின்றது.
எனவே ஏற்கெனவே சாதகமான பல நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றி வைக்க தொடர் நடவடிக்கை எடுத்துதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.


