சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன?

சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன?

சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன, சாபநிவர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயன...

சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன, சாபநிவர்த்திக்கு என்ன செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக விளக்கியிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.


சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1) பெண் சாபம் 2) பிரேத சாபம் 3) பிரம்ம சாபம் 4) சர்ப்ப சாபம் 5) பித்ரு சாபம் 6) கோ சாபம் 7) பூமி சாபம் 8) கங்கா சாபம் 9) விருட்ச சாபம் 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம் 13) குலதெய்வ சாபம்.

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பவைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும்.

எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

சாபம் என்றால் என்ன தோஷம் என்றால் என்ன?
தோஷம் என்பது ஒரு பாவகாரியத்தை ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதன் மூலம் இயற்கையாக ஏற்படும் எதிர்வினை தான் தோஷம். தோஷத்தை போக்கிக்கொள்வது சுலபம்.

ஆனால், சாபத்தின் தன்மையே வேறு… ஒரு பாவகாரியத்தை ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பது தான் சாபம். சாபத்தை போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. காரணம் தீங்கிழைக்கப்பட்டவர்கள் மன்னித்தாலொழிய சம்பந்தப்பட்டவர்களுக்கு விமோசனம் கிடைப்பது மிகவும் கடினம்.

அகங்காரத்தின் காரணமாக ஒருவருக்கு ஒரு தீமையை ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரும் துன்பப்பட்டு மனதளவில் சபித்துவிடுகிறார். பாதிக்கப்பட்டவரின் தகுதிக்கு ஏற்ப அந்த சாபம் ஒரு கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இந்த நேரம் தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு இன்னாருக்கு இழைத்த அநீதிக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்… சாபத்தின் கடுமை ஓரளவோ முற்றிலுமாகவோ நீங்க வாய்ப்புண்டு.

இங்கே தான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தவறு செய்தவரும் தவறு இழைக்கப்பட்டவரும் இன்ன இன்னார் தான் என்று தெரிந்திருக்கும்போதோ அவர்கள் மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதோ இது சாத்தியப்படும். அதாவது சாப நிவர்த்திக்கு வழி உண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்து வரும். அதற்கு எங்கே போய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?

போன ஜென்மாவில் பசுவையும் கன்றையும் பிரித்துவிட்ட பாவத்தை ஒருவர் செய்கிறார் என்றால் இந்த ஜென்மத்தில் அவர் எப்படி சாப நிவர்த்தி பெறுவது? சம்பந்தப்பட்ட பசுவை கடந்த காலத்தில் / போன ஜென்மத்தில் போய் தேடமுடியுமா? (இத்தகையோர் இந்த பிறவியில் கோ-சம்ரட்சணம் செய்தால் ஓரளவு ஊழின் கடுமை குறையலாம். ஆனால், முற்றிலும் நீங்கிவிடாது).

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,262,doctor,13,Gallery,130,india,415,Jaffna,3664,lanka,9117,medical,7,Medicial,39,sports,377,swiss,15,technology,80,Trending,4501,Videos,10,World,625,Yarlexpress,4336,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன?
சாபத்திற்கும் தோஷத்திற்கும் வித்தியாசம் என்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCBwaVtu4EzETMIl63wRNlP8YxuQfpGWWrR1H6avIZPauOzGwNfkoOoakWxI2UmEVHJFfSvSFyhyOiYt_VEZyb0K9BHQ2-1il1yPu0tUyCfgnm_hJzlH_ruL2x5vLjbZmswcRf6Mbwgv4/s640/sapam.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCBwaVtu4EzETMIl63wRNlP8YxuQfpGWWrR1H6avIZPauOzGwNfkoOoakWxI2UmEVHJFfSvSFyhyOiYt_VEZyb0K9BHQ2-1il1yPu0tUyCfgnm_hJzlH_ruL2x5vLjbZmswcRf6Mbwgv4/s72-c/sapam.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/02/blog-post_388.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/02/blog-post_388.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content