சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை குறித்து தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து...
சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை குறித்து தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில்,
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடைசெய்து கட்டளை பிறப்பித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராகின்றார்.
சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில்,
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடைசெய்து கட்டளை பிறப்பித்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த சவேந்திர சில்வா பொறுப்பு கூற வேண்டியவராகின்றார்.
சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.