தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து சிகிச்...
தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு 10 நாட்களுக்கு முன்பு திருவாலங்காடு அருகே உள்ள மணவூர் கிராமத்திற்கு தினேஷ் என்ற இளைஞர் திரும்பியிருக்கிறார்.
அவருக்கு நேற்று திடீர் உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் சிகிச்சைக்கு வந்த தந்தை ஜோதியின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவசர அவசரமாக கவச உடை அணிவிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிறப்பு வார்டில் இருவருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு பிறகு இருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.