எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று (12) முதல் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும். இதுவரை, 59 சுயே...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று (12) முதல் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும்.
இதுவரை, 59 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 35 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 60 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று (11) வேட்புமனுக்கள் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகள் குறித்து ஒரு கூட்டம் நடைபெற்றது.
பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினால், அந்த அரசுச் சொத்து சம்பந்தப்பட்ட அரசு அமைப்பின் செயலாளர் இந்த விவகாரத்தை பொறுப்பேற்க வேண்டுமென நேற்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். பொதுத் தேர்தலின் போது எந்தவொரு அரச சொத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுவரை, 59 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 35 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 60 அரசியல் கட்சிகள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று (11) வேட்புமனுக்கள் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகள் குறித்து ஒரு கூட்டம் நடைபெற்றது.
பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினால், அந்த அரசுச் சொத்து சம்பந்தப்பட்ட அரசு அமைப்பின் செயலாளர் இந்த விவகாரத்தை பொறுப்பேற்க வேண்டுமென நேற்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். பொதுத் தேர்தலின் போது எந்தவொரு அரச சொத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.