பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்...
பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழுப்பில் இடம்பெற்ற வேட்பாளாகள் தெரிவின்போது இத் தெரிவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளாகள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த முறை சுதந்திரக்கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மஸ்தான், இம் முறை கட்சி தாவி, பொதுஜன பெரமுனவின் மூலமாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கொழுப்பில் இடம்பெற்ற வேட்பாளாகள் தெரிவின்போது இத் தெரிவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளாகள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த முறை சுதந்திரக்கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மஸ்தான், இம் முறை கட்சி தாவி, பொதுஜன பெரமுனவின் மூலமாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.