தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங...
தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று(வியாழக்கிழமை) வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2 இலட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணித்த 2 இலட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான அபராதமாக இதுவரை 2 கோடியே 68 இலட்சம் இந்திய ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் வரை 1 கோடியே 46 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நேற்று வரையான ஒரே நாளில் ஒரு கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று(வியாழக்கிழமை) வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2 இலட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணித்த 2 இலட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான அபராதமாக இதுவரை 2 கோடியே 68 இலட்சம் இந்திய ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் வரை 1 கோடியே 46 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நேற்று வரையான ஒரே நாளில் ஒரு கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.