ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வு வவுனியா, தமி...
ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் 15ஆம் ஆண்டு நினைவுகூரல் வவுனியாவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களினால் மெழுகுதிரி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, வவுனியா மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத், தராக்கி சிவராம் தொடர்பான நினைவு சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு வவுனியா, தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களினால் மெழுகுதிரி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது, வவுனியா மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத், தராக்கி சிவராம் தொடர்பான நினைவு சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.