கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறி உல்லாச விடுதியில் இருந்து வெளியேறி கடற்கரைக்குசென்று கடலில் குளித்த 17 வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்யப...
கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறி உல்லாச விடுதியில் இருந்து வெளியேறி கடற்கரைக்குசென்று கடலில் குளித்த 17 வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் யாரும் வெளியே சுற்றக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவளம் கடலில் சில வெளிநாட்டினர் குளிக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியானது.
பொலிஸார்சம்பவ இடத்திற்குச் சென்றுவிசாரணை நடத்தினர். இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு உல்லாசவிடுதியில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் 87 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது.
இவர்களில் 17 பேர் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். இதனை விடுதி நிர்வாகிகள் யாரும் பொலிஸாருக்குத்தெரிவிக்கவில்லை. இதையடுத்து கடலில் குளித்த 17 வெளிநாட்டினர் மீதும் கோவளம் போலீசார் 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் வெளிநாட்டினர் கடலுக்குச் சென்றதைப் பொலிஸாருக்குத் தெரிவிக்காத குற்றத்திற்காக விடுதி உரிமையாளர்கள் 5 பேரைப் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கேரளாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் யாரும் வெளியே சுற்றக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவளம் கடலில் சில வெளிநாட்டினர் குளிக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியானது.
பொலிஸார்சம்பவ இடத்திற்குச் சென்றுவிசாரணை நடத்தினர். இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு உல்லாசவிடுதியில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் 87 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது.
இவர்களில் 17 பேர் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். இதனை விடுதி நிர்வாகிகள் யாரும் பொலிஸாருக்குத்தெரிவிக்கவில்லை. இதையடுத்து கடலில் குளித்த 17 வெளிநாட்டினர் மீதும் கோவளம் போலீசார் 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் வெளிநாட்டினர் கடலுக்குச் சென்றதைப் பொலிஸாருக்குத் தெரிவிக்காத குற்றத்திற்காக விடுதி உரிமையாளர்கள் 5 பேரைப் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.