யாழில் மேலும் 3 பேருக்கு தொற்று… 10 ஆக அதிகரித்தனர் கொரோனா நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்...
யாழில் மேலும் 3 பேருக்கு தொற்று… 10 ஆக அதிகரித்தனர் கொரோனா நோயாளர்கள்
யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று பின்னிரவு வெளியான பரிசோதனை முடிவுகளில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என யாழிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ் போதகருடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றிற்கு இலக்கான கட்டிட ஒப்பந்தக்காரர் வசிக்கும் தாவடி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 18 பேரிடம் நேற்று முன்தினம் (3) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே, இந்த தொற்று உறுதியானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.