கொரோனோ வைரஸ் தொற்று இருப்பதாக யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டவர்களில் நால்வர் குணமடைந்து தற்போது தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்திய நிலையில் ...
கொரோனோ வைரஸ் தொற்று இருப்பதாக யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டவர்களில் நால்வர் குணமடைந்து தற்போது தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்திய நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனோ தொற்று நோயாளர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு பலாலியில் வைக்கப்பட்டிருந்த 20 பேரில் 16 பேருக்கு தொற்று இருப்பது பரிசொதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்து விடுவிக்கப்படுகின்ற நான்கு பேரும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனோ தொற்று நோயாளர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு பலாலியில் வைக்கப்பட்டிருந்த 20 பேரில் 16 பேருக்கு தொற்று இருப்பது பரிசொதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்து விடுவிக்கப்படுகின்ற நான்கு பேரும் அரியாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.