கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (ஏப்ரல் 30) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமை...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (ஏப்ரல் 30) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 660ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
139 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
513 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒருவர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 660ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
139 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
513 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.