பெல்ஜியம் நாட்டில், கோரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து, அதனை இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ...
பெல்ஜியம் நாட்டில், கோரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து, அதனை இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாட்டு நிலவும் நிலையில், சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என புறக்கணித்த மூதாட்டி, தான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதால், இந்த வெண்டிலேட்டரை இளைய நோயாளிகளுக்கு கொடுத்து அவர்களை காப்பாற்றுங்கள் என மருத்துவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
தன்னை பற்றி கவலைப்படாமல் இளையவர்களுக்கு வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாட்களில் உயிரிழந்தார்.