அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை ..

அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை ..

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கட்ச...

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீவிரம் காட்ட வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

உலக வரலாற்றில் இதுவரை சந்திக்கப்பட்டிராத பாரிய மனித நெருக்கடிக்கு இலங்கைத் தீவும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கிற இந்த நிலைமையில் ஆரம்பத்திலேயே எமது மக்கள் அனைவருக்கும் பாரிய உன்னதமான சேவையினை வழங்கிக் கொண்டிருக்கும் சகல துறையினருக்கும் எமது மக்களோடு சேர்ந்து நாங்களும் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்பொழுது நிலவிக் கொண்டிருக்கிற இந்த நெருக்கடி நிலைமையிலே அரசாங்கம் தொடர்ந்து கொண்டிருக்கிற ஊரடங்குச் சட்டத்தின் விளைவாக தங்கள் அன்றாட ஐPவனத்திற்கான தொழில்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கிற பலவீனமான சமூகத் தரப்பினர்களுக்கு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

தினசரி உழைத்துப் பிழைக்கின்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவது என அரசாங்கம் தீர்மானித்து அறிவித்தலையும் மேற்கொண்டது. அந்த அறிவிப்பு வந்து பல நாட்கள் கடந்தும் கூட அதன் முழமையான பலன் இன்னமும் வடகிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டிலே சம்மந்தப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்பது ஓர் பாரதூரமான மனக்குறையாக இருந்து கொண்டிருக்கிறது.

தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாங்கள் ஒரு அரசியற் கட்சி என்ற வகையில் வட கிழக்கு மாகாணத்தில் பலமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலைமையில் தொடரும் இந்த நிலைமைகளை ஆதாரபூர்வமாக வடகிழக்கு மாகாணங்கள் தொடர்பிலே உறுதியாக பேச முயும் என்ற காரணத்தினால் தான் சொல்கிறோம்

ஆகவே இந்த நிலைமைகள் இலங்கைத் தீவின் பல்வேறு பாகங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதனையும் நாங்கள் மனிதாபிமான ரீதியாக பொறுப்புணர்வோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.

உலர் உணவுப் பொருட்களை வழங்குகிற விடயத்தைப் பொறுத்தமட்டிலே எல்லாக் குடும்பத்திற்கும் அவை உரிய நேரத்தில் போய்ச் சேர வேண்டுமென்பது அவசியமானது. இல்லையெனில் இந்தத் திட்டம் அர்த்தமற்றுப் போய்விடும். இந்தத் திட்டத்தின் கீழ் பலனடைய  வேண்டிய குடும்பங்கள் உதவிக்காக ஏங்கிக்க கொண்டிருக்கின்றன. அவர்கள் உதவிகளைக் கோரிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால் இந்தத் திட்டம் முனைப்போடு வேகம் கொடுக்கப்பட்டு தீவிரமாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தான். இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிற கிராம சேவையாளர்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை இருந்தால் அதனை இலகுவாக நிவர்த்தி செய்ய முடியும்.

சமூக சேவை நிறுவனங்கள,; தொண்டு நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள,; சனசமூக நிலையங்கள் ஆலயங்களோடு இணைந்த சமய மன்றங்களென பல்வேறு தரப்புக்களைச் சேர்ந்தவர்களை தொண்டர்களாக இணைந்து கொள்ள முடியும். ஆகவே தான் எங்களுடைய வேண்டுகோள் என்னவெனில் இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாகத் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பது தான். இது செய்யப்பட்டே ஆக வேண்டும்.

மேலும் மாவட்ட மட்டத்தில் ஒரு நல்லதொரு பொறிமுறை விரைந்து உருவாக்கப்பட வேண்டும். அல்லது ஒரு செயலணி நிறுவப்பட வேண்டும். மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கிற நிலைமையில் சில வேளைகளில் அவர்கள் கொரோனோ தாக்கத்தைக் கூட மறந்துவிட்டு பசியோடு போராடுகிற நிலைமை இருந்து கொண்டிருப்பதென்பது வேதனைக்குரிய விடயம் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஐந்தாயிரம் ருபாவை வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்தத் தொகை கூட கணிசமான குடும்பங்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை என எங்களுக்கு கிடைக்கும் தகவ்லக்ள் தெரிவிகிக்னறன. இந்த நிலைமை ஏனைய மாகாணங்களிலும் இருக்குமென்று தான் நினைக்கின்றோம். ஆகவே இந்த விடயங்களில் தீவிரம் காட்டப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

பொறுப்புள்ள அதிகாரிகள் அனைவரும் இதை அவசர அழைப்பாக கருதி செயற்பட வேண்டும். இதற்கான பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென்று நாங்கள் அவசர வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம்.

இறுதியாக இந்த நிலைமை எமது மக்களால் எதிர் கொள்ளப்படக்; கூடிய சவால். எமது மக்கள் 1983 ஆம் ஆண்டிலிருந்து 26 வருடங்கள் குண்டு வீச்சுக்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் உயிரிழப்புக்கள் பாரிய இடப்பெயர்வுகள் நோய்கள் உணவுப் பற்றாக்குறைகள் ஏன் பஞ்சமும் உட்பட அத்தனைக்கும் துணிவோடு முகங்கொடுத்த அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள.; எங்களுடைய இன்றைய இளைஞர்கள் கணிசமான எண்ணிகையிலே யுத்த காலத்திலே பிறந்து வளர்ந்;தவர்கள்.

ஆகவே எமது சமூகம் இந்தச் சவாலை துணிவோடு எதிர்கொள்ளும். பிறப்பு நிகழ்ந்து முடிந்த விடயம். இறப்பு ஒன்று தான் எங்கள் வாழ்க்கையிலே திட்டவட்டமாக நாங்கள் உறுதியோடு கூறக் கூடிய நிகழ்வு என்பது எமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆகவே எமது மக்கள் மரணத்தைக் கண்டு பயப்பிட மாட்டார்கள்.

ஆனால் சமூக உணர்வோடு பொறுப்புணர்வோடு தொடருகின்ற ஊடரங்கு நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அங்கும் இங்குமாக ஒரு சில பிறழ்வுகள் இருந்தாலும் கூட நிலைமையை நேரிலே அவதானிக்க வேண்டுமென்ற தவிப்போடு துடிப்போடு எவரும் இந்த நேரத்திலே ஊரடங்கு நிலைமையை தேவையற்ற விதததில் மீறிவிடக் கூடாது என்று அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.

சமூகத்தின் சகல துறைகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு தளங்களிலும் செயற்படுகின்ற அனைவரும் பொறுப்புணர்வோடு தங்களால் இயன்ற பணியினை வழங்கிக் கெர்ண்டிருக்கின்றார்கள். இந்த நெருக்கடி நிலைமையிலே தங்கள் சேவையை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிற அனைத்த துறையினருக்கும் நாங்கள் மீண்டுமொருமுறை நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த ஊரடங்கு நிலைமைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்எனக் கேட்டுக் கொள்கிறோம்

இன்றுள்ள பிரச்சனைகளில் இலகுவாக களைந்தெறியப்படக் கூடிய விடயங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தச் சவாலை இலங்கைத் தீவு ஒட்டுமொத்தமாக நிமிர்ந்து நின்று சமாளிப்பதிலே எமது மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்ற நம்பின்கையை நடைமுறை ரீதியாக நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கிற அந்த நிகழ்வுகளின் அடிப்படையிலே தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்தச் சவால்களிலிருந்து எமது சமூகமும் இந்த நாடும் வெற்றிகரமாக மீண்டெழுவதற்கு அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிற நிலைமையில் இந்தச் சவாலில் இருந்த நாங்கள் மீண்டெழுவோம் என்று கூறி கொள்கிறோம்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை ..
அரசாங்கம் அறிவித்த உதவித் திட்டங்கள் உரிய முறையில் சென்றடையவில்லை ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTvWr_ONCaHaJxESlY8DD54r6VZX3m9b33gHIZT0twjDUBXXUReG8ni-cZ5CFdVNpYF7WdM8s0hvd2mkPLPcO5GO47Ta-AE728eICCbU1t5f4ag_qPK-DiEswOJXwOaTJoOBLD3VjnTHQ/s640/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTvWr_ONCaHaJxESlY8DD54r6VZX3m9b33gHIZT0twjDUBXXUReG8ni-cZ5CFdVNpYF7WdM8s0hvd2mkPLPcO5GO47Ta-AE728eICCbU1t5f4ag_qPK-DiEswOJXwOaTJoOBLD3VjnTHQ/s72-c/%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D.%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/04/blog-post_19.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/04/blog-post_19.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content