அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர் வீட்...
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரே முழுமையாகக் குணமடைந்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.
வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் குறித்தநபர் அவரது வீட்டுக்கு நேற்று (சனிக்கிழமை) மாலை அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து வைத்தியர் சுகுணன் கூறுகையில், “கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சையின் பின்னர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு, இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மாதிரி அறிக்கையில் கொரோனா நெகற்றிவ் என வெளியாகியுள்ளது. எனினும் மீளவும் ஆய்வு செய்யப்பட்டதில் அவர் குணமடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டதுடன் அவர் வீட்டில் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்.
இதேவேளை, சிகிச்சை பெற்று வெளியேறியவரின் மனைவிக்கு பரிசோதனைகள் தொடர்கிறது. இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலன்னறுவை தமின்ன பகுதிக்கு சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவரே முழுமையாகக் குணமடைந்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.
வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் குறித்தநபர் அவரது வீட்டுக்கு நேற்று (சனிக்கிழமை) மாலை அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து வைத்தியர் சுகுணன் கூறுகையில், “கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சையின் பின்னர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவருக்கு, இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மாதிரி அறிக்கையில் கொரோனா நெகற்றிவ் என வெளியாகியுள்ளது. எனினும் மீளவும் ஆய்வு செய்யப்பட்டதில் அவர் குணமடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டதுடன் அவர் வீட்டில் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்.
இதேவேளை, சிகிச்சை பெற்று வெளியேறியவரின் மனைவிக்கு பரிசோதனைகள் தொடர்கிறது. இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலன்னறுவை தமின்ன பகுதிக்கு சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.