தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்சு லின் பற்றாக்குறை காணப்படுகின்றது என்று அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரி...
தற்போது நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்சு லின் பற்றாக்குறை காணப்படுகின்றது என்று அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜெயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித் துள்ளதாவது: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இன்சுலின் பயன் படுத்தப்படுகின்றது. தற்போது அரச மருத்துவமனைகளில் இன்சுலின் பற்றாக்குறை நிலவுகின்றது.
இன்சுலின் பெறுவதன் மூலம் சர்க் கரை அளவைக் கட்டுப்படுத்தும் பல நீரிழிவு நோயாளிகள் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் ளனர். ஊரடங்கு உத்தரவு விதிக்கப் பட்டுள்ளதால் மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக் குத் தேவையான இன்சுலினை அவர் கள் தபால் மூலம் வீடுகளுக்கு பெற் றுக்கொள்கின்றனர். இந்த பிரச்சி னைக்கு உடனடி தீர்வு வழங்க வேண் டும் - என்றார்.