சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் , “போட்டோ சலஞ்சர்” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போட்டோ சலஞ்சரில் பெண்களே இலக்கு வைக்க...
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் , “போட்டோ சலஞ்சர்” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போட்டோ சலஞ்சரில் பெண்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கையர்கள் அனைவரும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சவால்களைப் பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றாக “போட்டோ சலஞ்சர்” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கையர்கள் அனைவரும் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சவால்களைப் பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றாக “போட்டோ சலஞ்சர்” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தச் சவாலில் முக்கிய இலக்காக இருப்பது பெண்களின் புகைப்படங்களே எனத் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவாகும் புகைப்படங்களை ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று இவ்வாறு செயற்படுவதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
இவ்வாறு பெறும் பல்வேறு பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி டேட்டிங் மற்றும் வயது வந்தவர்களுக்கு மாத்திரம் உள்ள வலைத்தளங்களுக்கு பயன்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளன என்று குறிப்பிடப் படுகின்றது. இதனால் பேஸ்புக் சவால்க ளுக்காக புகைப்படங்களைப் பகிர்வதனைப் பெண்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.