யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. கு...
யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த ஊழியர் சுவிஸ் போதகர் சற்குணத்தினால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுவிஸ் சற்குணத்திற்கு கோரோனோ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 பேர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளளாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வ்வுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேரந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தலில் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து இந்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் ஆறு பேர் முதலில் தொற்றிற்கு இலக்கானது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நேற்று (14) நடைபெற்ற மீள் பரிசோதனையில் மேலும் எட்டுப் பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் வவுனியா பொது வைத்தியசாலை உத்தியோகத்தரும் உள்ளடங்குகிறார்.
குறித்த நபர் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டமையினால் அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் சில ஊழியர்களும் கடந்த சிலநாட்களாக சுய தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது
குறித்த ஊழியர் சுவிஸ் போதகர் சற்குணத்தினால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுவிஸ் சற்குணத்திற்கு கோரோனோ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் நெருங்கிப் பழகிய வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 பேர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளளாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வ்வுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேரந்த நபரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தலில் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து இந்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் ஆறு பேர் முதலில் தொற்றிற்கு இலக்கானது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நேற்று (14) நடைபெற்ற மீள் பரிசோதனையில் மேலும் எட்டுப் பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் வவுனியா பொது வைத்தியசாலை உத்தியோகத்தரும் உள்ளடங்குகிறார்.
குறித்த நபர் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டமையினால் அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் சில ஊழியர்களும் கடந்த சிலநாட்களாக சுய தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது