சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட தேவையுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் லண்டன...
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட தேவையுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிக்கும் ஸ்ரீ காயத்திரி நடன பாடசாலையின் இயக்குனரும் ஆசிரியருமான திருமதி மோகனா பகிரதனின் நிதிப்பங்களிப்பில் குறித்த போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி குடும்பநல தாதிய உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பொதுச்சுகாதார பரிசோதகர் பி.தளிர்றாஜ் மற்றும் குடும்பநல தாதிய அதிகாரி ஆகியோர் இணைந்து போசாக்கு பொதிகளை வழங்கி வைத்தனர்.