உலகலாவிய கொரோனா பெருந்தொற்றினை அடுத்து, பிரிட்டனில் வேலை வாய்ப்புகளை தக்கவைப்பதற்கான திட்டத்தில், ஊதியத்தில் 80 சதவீத ஊதியத்தை பெறும் தொழிலா...
உலகலாவிய கொரோனா பெருந்தொற்றினை அடுத்து, பிரிட்டனில் வேலை வாய்ப்புகளை தக்கவைப்பதற்கான திட்டத்தில், ஊதியத்தில் 80 சதவீத ஊதியத்தை பெறும் தொழிலாளர்களுக்கான (furloughed workers ) கால எல்லை, எதிர்வரும் ஜூன் மாதம் வரை, மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக திறைசேரியின் தலைவர் ( chancellor) ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் முதலில் மே மாத இறுதி வரை இயங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது, பிரிட்டன் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்படக்கூடிய தொழிலாளர்களை, வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள், தொழில் வழங்குனர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் பிரிட்டனின் முடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறைந்தது மூன்று கிழமைகளுக்கு மே 7 வரை நிடிக்கப்படும் என, நேற்று வியாழக்கிழமை அறிவித்ததனைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கான இந்த நீடிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான (furloughed workers) இந்த திட்டத்தின்படி அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் அரசாங்கம் 80 வீதத்தை, அல்லது அதிகபட்சமாக 2,500 பவுண்டை வழங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து மே மாதம் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொது யூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் முதலில் மே மாத இறுதி வரை இயங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது, பிரிட்டன் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்படக்கூடிய தொழிலாளர்களை, வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள், தொழில் வழங்குனர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.
வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் பிரிட்டனின் முடக்கம் தொடர்பான கட்டுப்பாடுகள் குறைந்தது மூன்று கிழமைகளுக்கு மே 7 வரை நிடிக்கப்படும் என, நேற்று வியாழக்கிழமை அறிவித்ததனைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கான இந்த நீடிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான (furloughed workers) இந்த திட்டத்தின்படி அவர்கள் பெற்றுவந்த ஊதியத்தில் அரசாங்கம் 80 வீதத்தை, அல்லது அதிகபட்சமாக 2,500 பவுண்டை வழங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து மே மாதம் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொது யூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.