ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பொலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் இன்று (வியாழக்கிழமை) இரசாயன வாயு கசிந்து வெளியேறியுள்ளது.
அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே 3 கிலோமீற்றர் தொலைவுக்குப் பரவியது. காற்றில் கலந்த இரசாயன வாயுவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் உட்பட 11 பேர் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜோர்ஜ் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, வாயு கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பொலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் இன்று (வியாழக்கிழமை) இரசாயன வாயு கசிந்து வெளியேறியுள்ளது.
அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே 3 கிலோமீற்றர் தொலைவுக்குப் பரவியது. காற்றில் கலந்த இரசாயன வாயுவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் உட்பட 11 பேர் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜோர்ஜ் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிகிச்சை பெறுவோருக்கு 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, வாயு கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.